25 686265d606f87
உலகம்செய்திகள்

டெல்லியில் முதல் முறையாக மேக விதைப்பு மூலம் செயற்கை மழை – எப்படி சாத்தியம்? என்ன பயன்?

Share

டெல்லியில் காற்று மாசுவை குறைக்க செயற்கை மழை பொழிய வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய தலைநகர் டெல்லியில் காற்று மாசடைவது ஓவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. காற்று மாசுவை குறைக்க அரசு தரப்பில், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும் காற்று மாசு குறையவில்லை.

இந்நிலையில், காற்று மாசுவை குறைக்க, செயற்கை மழை பொழிய வைக்க டெல்லி மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக மேக விதைப்பு மூலம், ஜூலை 4 முதல் 11 ஆம் திகதி வரை செயற்கை மழை பொழிய வைக்கப்பட உள்ளது என டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மன்ஜிந்தர் சிங் சிர்சா அறிவித்துள்ளார்.

இதற்கான செயல்பாடுகளை கான்பூர் ஐஐடி, புனேவில் உள்ள இந்திய வானிலை ஆய்வுத் துறையிடம் (ஐஎம்டி) சமர்ப்பித்துள்ளது.

இந்த சோதனைக்கு சுமார் ரூ.3.21 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 90 நிமிடங்களுக்கு, 100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், இந்த மேகவிதைப்பு நடைபெற உள்ளது.

மேகவிதைப்பு என்பது, வெள்ளி அயோடைடு, பொட்டாசியம் அயோடைடு, ட்ரை ஐஸ் அல்லது உப்பு போன்ற ரசாயனங்களை மேகங்களின் மீது தூவி, மழையை தூண்டும் ஒரு செயல்முறையாகும்.

வறட்சியைச் சமாளிக்க, மூடுபனியை அகற்ற, காற்றின் தரத்தை மேம்படுத்த, சீனா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் ஏற்கனவே இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே மழை மேகங்கள் இருக்கும்போது மட்டுமே இதை செயல்படுத்த முடியும். விமானங்கள், ராக்கெட்டுகள் அல்லது தரையில் உள்ள இயந்திரங்கள் மூலம் மேக விதைப்பை மேற்கொள்ள முடியும்.

இதன் மூலம், மழையின் அளவை 5 முதல் 15 சதவீதம் அதிகரிக்க முடியும். இதனால் சில மணி நேரம் முதல் சில நாட்களுக்கே மட்டுமே காற்றின் தரத்தை அதிகரிக்க முடியும்.

அதேவேளையில், வாகனங்கள், தொழிற்சாலைகள், தீப் புகை போன்ற காற்று மாசுபாட்டின் மூலங்களை இந்த செயற்கை மழை அகற்றுவதில்லை என்றும் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...