25 686265d606f87
உலகம்செய்திகள்

டெல்லியில் முதல் முறையாக மேக விதைப்பு மூலம் செயற்கை மழை – எப்படி சாத்தியம்? என்ன பயன்?

Share

டெல்லியில் காற்று மாசுவை குறைக்க செயற்கை மழை பொழிய வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய தலைநகர் டெல்லியில் காற்று மாசடைவது ஓவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. காற்று மாசுவை குறைக்க அரசு தரப்பில், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும் காற்று மாசு குறையவில்லை.

இந்நிலையில், காற்று மாசுவை குறைக்க, செயற்கை மழை பொழிய வைக்க டெல்லி மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக மேக விதைப்பு மூலம், ஜூலை 4 முதல் 11 ஆம் திகதி வரை செயற்கை மழை பொழிய வைக்கப்பட உள்ளது என டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மன்ஜிந்தர் சிங் சிர்சா அறிவித்துள்ளார்.

இதற்கான செயல்பாடுகளை கான்பூர் ஐஐடி, புனேவில் உள்ள இந்திய வானிலை ஆய்வுத் துறையிடம் (ஐஎம்டி) சமர்ப்பித்துள்ளது.

இந்த சோதனைக்கு சுமார் ரூ.3.21 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 90 நிமிடங்களுக்கு, 100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், இந்த மேகவிதைப்பு நடைபெற உள்ளது.

மேகவிதைப்பு என்பது, வெள்ளி அயோடைடு, பொட்டாசியம் அயோடைடு, ட்ரை ஐஸ் அல்லது உப்பு போன்ற ரசாயனங்களை மேகங்களின் மீது தூவி, மழையை தூண்டும் ஒரு செயல்முறையாகும்.

வறட்சியைச் சமாளிக்க, மூடுபனியை அகற்ற, காற்றின் தரத்தை மேம்படுத்த, சீனா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் ஏற்கனவே இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே மழை மேகங்கள் இருக்கும்போது மட்டுமே இதை செயல்படுத்த முடியும். விமானங்கள், ராக்கெட்டுகள் அல்லது தரையில் உள்ள இயந்திரங்கள் மூலம் மேக விதைப்பை மேற்கொள்ள முடியும்.

இதன் மூலம், மழையின் அளவை 5 முதல் 15 சதவீதம் அதிகரிக்க முடியும். இதனால் சில மணி நேரம் முதல் சில நாட்களுக்கே மட்டுமே காற்றின் தரத்தை அதிகரிக்க முடியும்.

அதேவேளையில், வாகனங்கள், தொழிற்சாலைகள், தீப் புகை போன்ற காற்று மாசுபாட்டின் மூலங்களை இந்த செயற்கை மழை அகற்றுவதில்லை என்றும் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

Share
தொடர்புடையது
04 6
செய்திகள்உலகம்

லியோனல் மெஸ்ஸி மீதான சமூக ஊடக விமர்சனம்: டொனால்ட் ட்ரம்ப்புடனான சந்திப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது!

புகழ்பெற்ற அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, தற்போது சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார்....

03 7
உலகம்செய்திகள்

ஆளில்லா வானூர்திகள் மற்றும் ஏவுகணை சுட்டு வீழ்த்தப்பட்டன!

சவூதி அரேபியாவின் ஷைபா (Shaybah) எண்ணெய் வயலை இலக்கு வைத்து ஏவப்பட்ட 6 ஆளில்லா வானூர்திகள்...

02 6
செய்திகள்உலகம்

ஈராக் எண்ணெய் களஞ்சியத்தின் மீது ஆளில்லா வானூர்தி தாக்குதல்: மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்!

தெற்கு ஈராக்கில் அமைந்துள்ள எண்ணெய் களஞ்சியமொன்றின் மீது ஆளில்லா வானூர்தி (Drone) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத்...

28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...