25 686265d606f87
உலகம்செய்திகள்

டெல்லியில் முதல் முறையாக மேக விதைப்பு மூலம் செயற்கை மழை – எப்படி சாத்தியம்? என்ன பயன்?

Share

டெல்லியில் காற்று மாசுவை குறைக்க செயற்கை மழை பொழிய வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய தலைநகர் டெல்லியில் காற்று மாசடைவது ஓவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. காற்று மாசுவை குறைக்க அரசு தரப்பில், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும் காற்று மாசு குறையவில்லை.

இந்நிலையில், காற்று மாசுவை குறைக்க, செயற்கை மழை பொழிய வைக்க டெல்லி மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக மேக விதைப்பு மூலம், ஜூலை 4 முதல் 11 ஆம் திகதி வரை செயற்கை மழை பொழிய வைக்கப்பட உள்ளது என டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மன்ஜிந்தர் சிங் சிர்சா அறிவித்துள்ளார்.

இதற்கான செயல்பாடுகளை கான்பூர் ஐஐடி, புனேவில் உள்ள இந்திய வானிலை ஆய்வுத் துறையிடம் (ஐஎம்டி) சமர்ப்பித்துள்ளது.

இந்த சோதனைக்கு சுமார் ரூ.3.21 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 90 நிமிடங்களுக்கு, 100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், இந்த மேகவிதைப்பு நடைபெற உள்ளது.

மேகவிதைப்பு என்பது, வெள்ளி அயோடைடு, பொட்டாசியம் அயோடைடு, ட்ரை ஐஸ் அல்லது உப்பு போன்ற ரசாயனங்களை மேகங்களின் மீது தூவி, மழையை தூண்டும் ஒரு செயல்முறையாகும்.

வறட்சியைச் சமாளிக்க, மூடுபனியை அகற்ற, காற்றின் தரத்தை மேம்படுத்த, சீனா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் ஏற்கனவே இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே மழை மேகங்கள் இருக்கும்போது மட்டுமே இதை செயல்படுத்த முடியும். விமானங்கள், ராக்கெட்டுகள் அல்லது தரையில் உள்ள இயந்திரங்கள் மூலம் மேக விதைப்பை மேற்கொள்ள முடியும்.

இதன் மூலம், மழையின் அளவை 5 முதல் 15 சதவீதம் அதிகரிக்க முடியும். இதனால் சில மணி நேரம் முதல் சில நாட்களுக்கே மட்டுமே காற்றின் தரத்தை அதிகரிக்க முடியும்.

அதேவேளையில், வாகனங்கள், தொழிற்சாலைகள், தீப் புகை போன்ற காற்று மாசுபாட்டின் மூலங்களை இந்த செயற்கை மழை அகற்றுவதில்லை என்றும் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...