MediaFile 22
உலகம்செய்திகள்

ஹொங்கொங் உயரமான வீடமைப்பு வளாகத்தில் பயங்கர தீ: 13 பேர் பலி, 28 பேர் காயம்!

Share

ஹொங்கொங்கில் உள்ள உயரமான வீடமைப்பு வளாகம் ஒன்றில் இன்று (நவம்பர் 26) ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 28 பேர் காயமடைந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த பயங்கர தீ விபத்து, நகரத்தின் டாய் போ (Tai Po) மாவட்டத்தில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தின், நிர்மாணிக்கப்பட்டுவரும் மாடிக் கட்டிடத்தில் முதலில் ஏற்பட்டது. பின்னர், அங்கிருந்து ஏனைய கட்டிடங்களுக்கும் தீ உடனடியாகப் பரவியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தீப்பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில், நகரின் தீயணைப்புப் படையின் 100 வாகனங்களும் 700க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.உயிரிழந்தவர்களில் ஒரு தீயணைப்பு வீரரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...