tamilni 40 scaled
உலகம்செய்திகள்

சுவிஸ் ரயில் நிலையமொன்றில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட நபர் குறித்த சமீபத்திய தகவல்கள்

Share

சுவிஸ் ரயில் நிலையமொன்றில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட நபர் குறித்த சமீபத்திய தகவல்கள்

சுவிஸ் ரயில் நிலையமொன்றில் உயிரற்ற உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பொலிசாரும் நீதிமன்ற அதிகாரிகளும் அது தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கினார்கள்.

இந்நிலையில், அந்த வழக்கு தொடர்பாக சில புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை காலை, சுவிட்சர்லாந்தின் Lausanne ரயில் நிலையத்துக்கருகில் உயிரற்ற உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

பிரபல ஊடகமான Blick செய்தித்தாள் இது குறித்த செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த நபரின் உடல் கண்டெடுக்கப்பட்ட ரயில்வே நடைமேடையில் இரத்தக்கரை காணப்படும் காட்சிகள் அந்த செய்தித்தாளில் வெளியிடப்பட்டுள்ளதுடன், பொலிசார் அந்த இடத்தில் கூடாரம் அமைத்து சோதனை நடத்திவரும் காட்சிகளும் வெளியிடப்பட்டிருந்தன.

அதாவது, அது கொலையாக இருக்கக்கூடும் என்பதை மறைமுகமாக அந்த ஊடகம் தெரிவித்திருந்தது.

அந்த சம்பவம் தொடர்பாக பொலிசாரும் நீதிமன்ற அதிகாரிகளும் விசாரணை நடத்திவந்த நிலையில், தற்போது சில புதிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அந்த உடல், தனது 40 வயதுகளிலிருக்கும் ஒரு ஆணின் உடல் என்றும், அவரது உடலுக்கருகிலேயே கத்தி ஒன்று கிடைத்துள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

முதல் கட்ட விசாரணையில், அந்த நபருடையை உடலில் இருந்த காயங்கள், அவர் தன்னைத்தானே காயப்படுத்திக்கொண்டதால் ஏற்பட்ட காயங்கள் என்பது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

Share
தொடர்புடையது
25 68f75f57333cd
செய்திகள்இலங்கை

ருஹுணு விவசாய பீட மோதல்: 21 மாணவர்கள் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று (அக்டோபர் 21) முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், ருஹுணு பல்கலைக்கழக விவசாய...

vegetable
செய்திகள்இலங்கை

கனமழை காரணமாக காய்கறி விலைகள் அதிகரிக்கும் அபாயம்: மனிங் சந்தை வர்த்தகர்கள் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாகக் காய்கறி விலைகள் அதிகரிக்கும் என்று மனிங் சந்தை...

images 2 1
செய்திகள்இலங்கை

வடக்கு மாகாண கல்வி அபிவிருத்தி முன்மொழிவு ஆளுநரிடம் கையளிப்பு: ஆசிரியர் ஆளணி சீராக்கம் குறித்து கலந்துரையாடல்!

வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகம் மற்றும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினருக்கும் இடையே இன்று...

25 68f722fb6bd68
செய்திகள்இலங்கை

முதலமைச்சர் வேட்பாளர் ஆசை! பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகத் தயார் என தகவல்!

அரசியல் வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்களின்படி, எதிர்வரும் ஆண்டில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு,...