23 653775f163c40
உலகம்செய்திகள்

62 வயது தந்தைக்கு மறுமணம் செய்து வைத்த பாச மகள்

Share

62 வயது தந்தைக்கு மறுமணம் செய்து வைத்த பாச மகள்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் மகளே தந்தைக்கு மறுமணம் செய்து வைத்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கேரள மாநிலம் பத்தினம்திட்டாவின் திருஏறங்காவு பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ண குருப் (62).

இவரது மனைவி கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் ராதாகிருஷ்ண குருப் விரக்தியில் இருந்துள்ளார்.

தந்தையின் நிலையை கண்டு கவலையுற்ற குருப்பின் மகள் ரெஞ்சு, அவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என முடிவெடுத்தார்.

இதற்காக அவர் திருமண வரன் பார்க்கக்கூடிய இணையதளங்களில் தந்தைக்கு துணையை தேடினார். அப்போது கணவரை இழந்து தனிமையில் வாழ்ந்து வந்த மல்லிகா குமாரி (60) என்பவரை பற்றிய விவரம் தெரிய வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து அவர் தனது தந்தைக்கு சரியான பொருத்தமாக இருப்பார் என நினைத்த மகள் ரெஞ்சு, அவரது குடும்பத்தினரை தொடர்புகொண்டு பேசி, பின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இருவரது குடும்பத்தினரும் ஒன்றுகூடி ராதாகிருஷ்ண குருப்புக்கும், மல்லிகா குமாரிக்கும் திருமணம் செய்து வைத்தனர். இந்த திருமணத்தில் இருவரது உறவினர்களும் சேர்த்து 50 பேர் கலந்து கொண்டனர்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...