கண் தானம் செய்யப்பட்டு நடிகர் டேனியல் பாலாஜியின் உடல் நல்லடக்கம்
மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் உடல் சென்னை ஓட்டேரி பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பிரபல நடிகர் டேனியல் பாலாஜி 48 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னையில் வைக்கப்பட்டிருந்த டேனியல் பாலாஜியின் உடலுக்கு பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
ஏற்கனவே அவர் தனது கண்களை தானம் செய்திருந்த நிலையில், நல்லடக்கத்திற்கு முன்பாக டேனியல் பாலாஜியின் கண்கள் தானம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் ஓட்டேரி பகுதியில் உள்ள இடுகாட்டில் டேனியல் பாலாஜியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Comments are closed.