22 6
உலகம்

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் போது பதிவான சைபர் தாக்குதல்கள்

Share

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் போது பதிவான சைபர் தாக்குதல்கள்

நடந்து முடிந்த பாரிஸ் (Paris) ஒலிம்பிக் (Olympics) போட்டிகளின் போது 140 சைபர் தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் கடந்த ஜூலை மாதம் 26ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் திருவிழா, இந்த மாதம் 11ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.

இந்தப் போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில், போட்டிகள் தொடங்கிய தினத்திலிருந்து நிறைவடைந்த நாள் வரை 140 சைபர் தாக்குதல்கள் பதிவாகியிருந்ததாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல்கள் முக்கியமாக அரசு நிறுவனங்கள், விளையாட்டு, போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு உட்கட்டமைப்புக்களை குறிவைத்ததாக பிரான்ஸ் நாட்டின் அரசாங்க இணைய பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால், இது விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ள எந்த தகவல் அமைப்புகளையும் பாதிக்கவில்லை எனவும் குறித்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, போட்டி தொடங்கும் நாளன்று பிரான்ஸ் நாட்டின் தொடருந்து கடவைகள் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
GettyImages 1202240221
செய்திகள்உலகம்

மார்ச் 20-ல் வெளியாகிறது புதிய BTS அல்பம் – உலகச் சுற்றுப்பயணத்திற்கும் தயார்!

உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள தென் கொரியாவின் புகழ்பெற்ற கே-பாப் (K-pop) இசைக் குழுவான BTS,...

26 695ce6c29f3e6
உலகம்செய்திகள்

சுவிஸ் தீவிபத்து: 40 பேர் பலியான சோகம்; நினைவேந்தலில் பங்கேற்க பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் வருகை!

சுவிட்சர்லாந்தின் பனிச்சறுக்குத் தலமான கிரான்ஸ்-மொன்டானாவில் (Crans-Montana) உள்ள மதுபான விடுதியில் புத்தாண்டு தினத்தன்று நிகழ்ந்த பயங்கரத்...

26 695cd23d3691d
உலகம்செய்திகள்

ஜேர்மனியில் 50% குறைந்த புகலிடக்கோரிக்கைகள்: கடுமையான சட்டங்களே காரணம் என உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் அறிவிப்பு!

ஜேர்மனியில், 2025ஆம் ஆண்டில் புகலிடக்கோரிக்கைகள் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது. 2025ஆம் ஆண்டிலோ, புகலிடக்கோரிக்கைகளின் எண்ணிக்கை 113,236...

MediaFile 8
செய்திகள்உலகம்

மதுரோவை விட மோசமான நிலையைச் சந்திப்பீர்கள்: இடைக்கால ஜனாதிபதி டெல்சிக்கு டிரம்ப் பகிரங்க மிரட்டல்!

வெனிசுலாவின் தற்போதைய இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ், அமெரிக்காவின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படாவிட்டால் மிகக்கடுமையான விளைவுகளைச் சந்திக்க...