கியூபா நாட்டின் மடான்சாஸ் நகரில் உள்ள எண்ணை சேமிப்பு கிடங்கு மீது மின்னல் தாக்கியதில், எண்ணெய் கிடங்கில் மிகப்பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஒரு கலன் மீது மின்னல் தாக்கி தீப்பிடித்த நிலையில், அருகில் இருந்த மற்றொரு கலன் மீதும் தீ பரவியதால் குறித்த பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எண்ணை கிடங்கில் இருந்து சுமார் 100 கி.மீ. தூரத்துக்கு கரும்புகை பரவியுள்ளது.
இந்த விபத்தில் 121 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீட்பு பணியில் ஈடுபட்ட 17 தீயணைப்பு வீரர்களை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வந்தாலும் தீ கட்டுக்குள் வரவில்லை.
எண்ணை கிடங்குக்கு அருகே உள்ள பகுதிகளில் இருந்து சுமார் 1,900 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயை அணைக்க நட்பு நாடுகளின் சர்வதேச நிபுணர்களின் உதவிகள் மற்றும் ஆலோசனைகளை நாடியுள்ளதாக கியூபா நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
#world
Leave a comment