9 44
உலகம்செய்திகள்

கோவிட் குறித்த தரவுகளை சீனாவிடம் மீண்டும் கோரும் உலக அமைப்பு

Share

கோவிட் குறித்த தரவுகளை சீனாவிடம் மீண்டும் கோரும் உலக அமைப்பு

சீனாவின் வுஹான் நகரில் கோவிட் தொற்றுநோய் பரவ ஆரம்பித்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இந்தநிலையில் அதன் தோற்றம் குறித்த தரவுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு உலக சுகாதார நிறுவனம் சீனாவை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இது ஒரு தார்மீக மற்றும் அறிவியல் கட்டாயமாகும் என்று உலக சுகாதார மையம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

அத்துடன், நாடுகளுக்கு இடையே வெளிப்படைத்தன்மை, பகிர்வு மற்றும் ஒத்துழைப்பு இல்லாமல், எதிர்கால தொற்றுநோய்களுக்கு உலகத்தால் போதுமான தயார் நிலையை உருவாக்க முடியாது என்றும் உலக சுகாதார மையம் குறிப்பிட்டுள்ளது.

பல விஞ்ஞானிகள் கோவிட் வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு இயற்கையாகவே பரவியதாக நினைக்கிறார்கள்.

ஆனால் அது வுஹானில் உள்ள ஒரு ஆய்வகத்திலிருந்து வெளிப்பட்டதாக சில சந்தேகங்கள் தொடர்கின்றன.

இதற்கிடையில் உலக சுகாதார மையத்தின் புதிய கோரிக்கைக்கு சீனா இன்னும் பதிலளிக்கவில்லை.

தகவல்களின்படி சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் இருந்து வைரஸ் தொற்று பரவிய செய்தி 2019 டிசம்பர் 31ஆம் திகதி வெளியானது.

2020 விடியற்காலையில் உலக சுகாதார மையத்தின் பணியாளர்கள் தமது அவசர நிலையை ஆரம்பித்தனர்.

அடுத்த வந்த மூன்று நாட்களில் உலக சுகாதார மையம், தமது உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

2020 ஜனவரி 9-12 திகதிகளுக்குள், அந்த அமைப்பு, நாடுகளுக்கான அதன் முதல் விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டது,

இந்தநிலையில், பாரிய அழிவுகளை அடுத்து 2023 இல் கோவிட்டில் இருந்து உலகம் விடுபட்ட செய்தியை உலக சுகாதார மையம் வெளியிட்டது.

இதேவேளை உலக சுகாதார மையத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸின் தகவல்படி, கோவிட்டினால் குறைந்தது ஏழு மில்லியன் மக்கள் இறந்துள்ளனர்.

எனினும் உண்மையான எண்ணிக்கை 20 மில்லியன் என்றும் அதிகார பூர்வ மதிப்பீட்டை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில் அடுத்த தொற்றுநோய் எந்த நேரத்திலும் வரலாம் என்றும் அதற்கு உலகம் தயாராக இருக்கவேண்டும் என்றும் கெப்ரேயஸ் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...