24 667f7cfe0ff26 2
உலகம்செய்திகள்

பணியாளர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் கொடுக்கும் நாடுகள்: முதலிடம் பிடித்துள்ள நாடு எது தெரியுமா!

Share

பணியாளர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் கொடுக்கும் நாடுகள்: முதலிடம் பிடித்துள்ள நாடு எது தெரியுமா!

பணியாளர்களுக்கு சரியான நேரத்துக்கு சம்பளம் கொடுக்கும் நாடுகளை பற்றிய ஆய்வொன்று சமீபத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, 68.8 சதவிகித சுவிஸ் நிறுவனங்கள் சரியான நேரத்தில் சம்பளம் கொடுக்கின்றன என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆய்வுகளின் மூலம், சுவிட்சர்லாந்து(Switzerland) முதலிடம் பிடித்துள்ளதாக தெரிய வருகின்றது.

ஐரோப்பிய நாடுகளை ஒப்பிட்டுப்பார்க்கும்போது, டென்மார்க்(Denmark) (94.2%), போலந்து (82.7%) மற்றும் நெதர்லாந்து(Netherlands) (76.1%) ஆகிய நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மட்டுமே சரியான நேரத்தில் செலுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்பெயின்(Spain)(46.7%), இத்தாலி(Italy) (41.1%) மற்றும் போர்த்துக்கல்(Portugal) (19.2%) போன்ற ஐரோப்பிய நாடுகளில் உள்ள நிறுவனங்கள் சம்பளம் கொடுக்கும் தரவரிசையில் கீழே உள்ளன.

சுவிட்சர்லாந்தில் உள்ள துறைகளை ஒப்பிட்டு நோக்கும்போது, கட்டுமானம் (75.2%) மற்றும் நிதி (73.5%) துறைகளில் உள்ள நிறுவனங்கள் மிகவும் நம்பகமானவை, அதைத் தொடர்ந்து மொத்த விற்பனை (63.3%) மற்றும் சில்லறை விற்பனை (62.9%) ஆகிய துறைகள் தங்கள் பணியாளர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் வழங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், போக்குவரத்து மற்றும் தளவாடங்கள், தகவல் தொடர்பு சேவைகள் மற்றும் உள்ளூர் மற்றும் தொலைதூர போக்குவரத்து துறைகளில் சரியான நேரத்தில் சம்பளம் கொடுப்பதில் குறிப்பிடத்தக்க அளவில் மோசமான நிலை காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

உலகம் முழுவதுமே, பெரிய நிறுவனங்களை விட சிறிய நிறுவனங்கள் பெரும்பாலும் சரியான நேரத்தில் தங்கள் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...

25 690c956ec39eb
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கண் பரிசோதனை நிலையத்தில் தீ விபத்து: மின் ஒழுக்கு காரணமெனத் தகவல்!

திருகோணமலைத் துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, திருகோணமலை பொது வைத்தியசாலையின் அருகாமையில் உள்ள ஒரு தனியார் கண்...