6 11 scaled
உலகம்செய்திகள்

பணியாளர்களுக்கு சரியான நேரத்துக்கு சம்பளம் கொடுக்கும் நாடுகள்: முன்னிலை வகிக்கும் நாடு

Share

பணியாளர்களுக்கு சரியான நேரத்துக்கு சம்பளம் கொடுக்கும் நாடுகள்: முன்னிலை வகிக்கும் நாடு

பணியாளர்களுக்கு சரியான நேரத்துக்கு சம்பளம் கொடுக்கும் நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்றாக இருப்பதாக சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது.

பணியாளர்களுக்கு சரியான நேரத்துக்கு சம்பளம் கொடுக்கும் நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்றாக இருப்பதாக Dun & Bradstreet என்னும் ஆய்வமைப்பு மேற்கொண்ட ஆய்வொன்று தெரிவிக்கிறது.

குறிப்பாக, 68.8 சதவிகித சுவிஸ் நிறுவனங்கள் சரியான நேரத்தில் சம்பளம் கொடுக்கின்றன என அந்த அமைப்பு தெரிவிக்கிறது.

ஐரோப்பிய நாடுகளை ஒப்பிட்டுப்பார்க்கும்போது, டென்மார்க் (94.2%), போலந்து (82.7%) மற்றும் நெதர்லாந்து (76.1%) ஆகிய நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மட்டுமே சரியான நேரத்தில் செலுத்துவதாகக் கண்டறியப்பட்டது. ஸ்பெயின் (46.7%), இத்தாலி (41.1%) மற்றும் போர்ச்சுகல் (19.2%) போன்ற ஐரோப்பிய நாடுகளில் உள்ள நிறுவனங்கள் சம்பளம் கொடுக்கும் தரவரிசையில் கீழே உள்ளன.

சுவிட்சர்லாந்தில் உள்ள துறைகளை ஒப்பிட்டு நோக்கும்போது, கட்டுமானம் (75.2%) மற்றும் நிதி (73.5%) துறைகளில் உள்ள நிறுவனங்கள் மிகவும் நம்பகமானவை, அதைத் தொடர்ந்து மொத்த விற்பனை (63.3%) மற்றும் சில்லறை விற்பனை (62.9%) ஆகிய துறைகள் தங்கள் பணியாளர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் வழங்குகின்றன.

ஆனால், போக்குவரத்து மற்றும் தளவாடங்கள், தகவல் தொடர்பு சேவைகள் மற்றும் உள்ளூர் மற்றும் தொலைதூர போக்குவரத்து துறைகளில் சரியான நேரத்தில் சம்பளம் கொடுப்பதில் குறிப்பிடத்தக்க அளவில் மோசமான நிலை காணப்படுவதையும் மறுப்பதற்கில்லை.

ஒரு சுவாரஸ்ய தகவல் என்னவென்றால், உலகம் முழுவதுமே, பெரிய நிறுவனங்களை விட சிறிய நிறுவனங்கள் பெரும்பாலும் சரியான நேரத்தில் தங்கள் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கின்றன.

Share
தொடர்புடையது
Untitled 37
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிஐடி தடுப்புக்காவலில் இருந்த கைதிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்: நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராக கடும் நடவடிக்கை!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) தடுத்து வைக்கப்பட்டுள்ள ‘கணேமுல்ல சஞ்சீவ’ படுகொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக...

Untitled 35
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு கிணற்றுப் படுகொலைச் சம்பவங்கள்: பிரதான சூத்திரதாரி கொழும்பில் கைது!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பகுதியில் இடம்பெற்ற அதிர்ச்சியை ஏற்படுத்திய கிணற்றுப் படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய...

Untitled 34
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வறட்சி அதிகரிப்பு: இலங்கையில் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய நிலை என எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக, அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு...

Untitled 32
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிதி மோசடியில் ஈடுபட்ட 125 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்!

இலங்கையில் தங்கியிருந்து இணையவழி நிதி மோசடிகளில் (Online Scams) ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 125...