உலகம்செய்திகள்

கொரோனாத் தொற்றை பரப்பியவருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Share
342846 1440x563 1
Share

கொரோனாத் தொற்றை பரப்பியவருக்கு 5 ஆண்டுகள் சிறை!

உலகளாவிய ரீதியில் கொரோனாத் தொற்று பரவலடைந்து வருகிறது, இந்த நிலையில் தென் கிழக்காசிய நாடான வியட்நாம் கொவிட் தொற்றால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் வியட்நாமில் கொரோனாத் தொற்று பரவத் தொடங்கியபோது, சிறந்த முறையில் செயற்பட்டு கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்தியிருந்தது, ஆனால் தற்போது வியட்நாமில் மீண்டும் கொரோனாத் தொற்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் வெறும் ஆயிரங்களாக இருந்த கொரோனாத் தொற்றாளர்கள் எண்ணிக்கை தற்போது 5 லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் வியட்நாமில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வியட்நாமின் ஹோ சி மின் நகரில் இருந்து காமவ் நகருக்கு திரும்பிய லீ வான் ட்ரி என்பவர் தன்னை 21 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்தாது சுற்றித் திரிந்துள்ளார். குறித்த நபர் மூலமாக 8 பேருக்கு கொரோனாத் தொற்று பரவியது எனவும், தொடர்ந்து தொற்றாளர்கள் தொகை சடுதியாக அதிகரித்தது எனவும் தெரிவிக்கப்படுகிறது,

இந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய குற்றத்துக்காக இவருக்கு 5 ஆண்டுகள்
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...