உலகம்

கொரோனா தொற்று – சுவிட்சர்லாந்து அரசு தகவல்

tyjugytjgy
Share

உருமாறிய ஒமைக்ரான் வைரசால் கொரோனா தொற்று விரைவில் முடிவுக்கு வர வாய்ப்பு என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வந்து கொண்டிருக்கிறது. அந்த வைரஸ் உருமாற்றம் அடைந்ததால் கொரோனா நோய்தொற்று அதிகரித்தபடியே இருக்கிறது.

தற்போது புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்ததையடுத்து கொரோனா நோய் தொற்று முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் முழுமையான பலனை அளிக்கவில்லை. இதனால் கொரோனா பெரும் தொற்று எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்வி நிலவி வருகிறது. இதற்கிடையே உருமாறிய ஒமைக்ரான் வைரசால் கொரோனா பெருந்தொற்று விரைவில் முடிவுக்கு வர வாய்ப்பு உள்ளது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அந்த வைரசால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தியால் கொரோனா தொற்று முடிவுக்கு வர வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று முடிவு காலத்துக்கு வருகிறது என்று சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் அலைன் பெர்செட் கூறியதாவது:-

ஒரு பெருந்தொற்றில் இருந்து அதன் முடிவு கட்டத்துக்கு செல்வதில் நாம் தீர்க்கமானதாக இருக்கக்கூடிய ஒரு திருப்புமுனையில் இருக்கிறோம். மக்களிடம் அதிகளவில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகி இருக்கிறது.

ஒமைக்ரான் வைரஸ் இந்த கொரோனா தொற்று நோயின் முடிவின் தொடக்கமாக இருக்கலாம். ஒமைக்ரான் வைரஸ் மிகவும் வேகமாக பரவக்கூடியது. குறைவான ஆபத்துக்கொண்டது.

ஆனால் அந்த வைரஸ் எங்களது தடுப்பை உடைப்ப தற்கு எந்த காரணமும் இல்லை. அது எச்சரிக்கையாக மாறுவதற்கான பகுதியையும் கொண்டிருக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

சுவிட்சர்லாந்து அரசு கொரோனா தனிமைப்படுத்தும் காலத்தை 10 நாளில் இருந்து 5 நாட்களாக குறைக்க முடிவு செய்துள்ளது.

 

#World

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

2 19
உலகம்செய்திகள்

இந்திய-பாகிஸ்தான் பதற்றங்களுக்கு மத்தியில் சமரசத்துக்கு முயலும் இரண்டு நாடுகள்

சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் இந்தியாவின் தலைநகர் புதுடில்லிக்கு சென்றுள்ளார். ஈரான் வெளியுறவு அமைச்சர் நேற்று...

3 10
உலகம்செய்திகள்

வத்திக்கான் புகைப்போக்கியில் இன்று இரண்டாவது நாளாகவும் கறுப்புப் புகை

வத்திக்கானின் சிஸ்டைன் தேவாலயத்திற்கு மேலே உள்ள புகைப் போக்கியில் இருந்து இன்றும் கறுப்பு புகை வெளியானது....

4 10
உலகம்செய்திகள்

இந்திய ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்திய (India) ஆளில்லா விமானம் ஒன்றை பாகிஸ்தான் இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...