சீனாவில் மாணவர்களுக்குக் கொரோனா நேரடி வகுப்புகள் இரத்து
உலகம்செய்திகள்

சீனாவில் மாணவர்களுக்குக் கொரோனா! – நேரடி வகுப்புகள் இரத்து

Share

சீனத் தலைநகர் பீஜிங்கில் பாடசாலை மாணவர்களுக்குக் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் நேரடி வகுப்புகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

பீஜிங்கில் சாயோயாங் மாவட்டத்தில் நடுநிலைப் பாடசாலை மாணவர்கள் 10 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பீஜிங் நிர்வாகம் உஷார் அடைந்துள்ளது. அங்கு பாடசாலைகளில் நேரடி வகுப்புகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. கொரோனா பரிசோதனைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

மேலும் பொதுமக்களில் 4 பேருக்கும் பீஜிங்கில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவின் பிரதான பகுதியில் 24 ஆயிரத்து 326 பேருக்கு சமூகத் தொற்று பதிவாகியுள்ளது. அவர்களில் பெரும்பாலோருக்கு அறிகுறிகள் இல்லை.

சீன நாட்டின் பொருளாதார தலைநகர் என்ற சிறப்புக்குரிய ஷாங்காய் நகரில், இன்று காலையுடன் முடிந்த ஒரு நாளில் கொரோனாத் தொற்றால் 12 பேர் உயிரிழந்துள்ளமை அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன.

#WorldNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...