21 6
உலகம்செய்திகள்

சுற்றுலா விசாவை தொழில் விசாவாக மாற்ற தடை விதித்த நாடு

Share

சுற்றுலா விசாவில் பஹ்ரைனுக்கு (Bahrain) சென்று தொழில் விசாவாக மாற்ற முடியாது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

குறித்த விடயத்தை உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது என இலங்கைக்கான இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பை மேற்கோள்காட்டி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (Srilanka Bureau of Foreign Employment) தெரிவித்துள்ளது.

பஹ்ரைனின் 1965 குடியேற்றச் சட்டத்தின் திருத்தங்களின்படி, எந்தவொரு சூழ்நிலையிலும் ஒரு வெளிநாட்டவர் நுழைவு விசாவை தொழில் அல்லது குடியிருப்பு அனுமதியாக மாற்ற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இருப்பினும், சுற்றுலா விசாவை சலுகைக் காலத்துடன் கூடிய பணி விசாவாக மாற்ற அனுமதிக்கும் வகையில் விதிகள் திருத்தப்பட்டுள்ளன, அதன்படி, முன்னர் வசூலிக்கப்பட்ட 60 பஹ்ரைன் தினார் கட்டணம் 250 பஹ்ரைன் தினார்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2024 பிப்ரவரி 13 முதல் பஹ்ரைன் மாநிலத்தில் வேலைவாய்ப்புக்காக சுற்றுலா விசா மூலம் நுழைவதை தடை செய்ய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்திருந்தது.

அதன்படி, தொடர்புடைய சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் இந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் திகதி பஹ்ரைன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

அதன்படி, 1965 ஆம் ஆண்டு பஹ்ரைனின் குடிவரவுச் சட்டத்தின் திருத்தங்களின்படி, எந்தவொரு சூழ்நிலையிலும், அனுசரணையாளர் இல்லாத வெளிநாட்டவர் நுழைவு விசாவை பணி வதிவிட அனுமதியாக மாற்ற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இந்த சூழ்நிலையின் அடிப்படையில், பஹ்ரைனில் அதிகளவானோர் சுற்றுலா விசாக்களை பயன்படுத்தி பஹ்ரைனில் பணிபுரிவதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

எக்காரணம் கொண்டும், அனுசரணையாளர் இல்லாமலும், சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி பணியகத்தில் பதிவு செய்யாமலும் பஹ்ரைனில் வேலை தேடுவதற்காக வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என்று பணியகம் புலம்பெயர்ந்த சமூகத்தை கேட்டுக்கொள்கிறது.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...