21 6
உலகம்செய்திகள்

சுற்றுலா விசாவை தொழில் விசாவாக மாற்ற தடை விதித்த நாடு

Share

சுற்றுலா விசாவில் பஹ்ரைனுக்கு (Bahrain) சென்று தொழில் விசாவாக மாற்ற முடியாது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

குறித்த விடயத்தை உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது என இலங்கைக்கான இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பை மேற்கோள்காட்டி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (Srilanka Bureau of Foreign Employment) தெரிவித்துள்ளது.

பஹ்ரைனின் 1965 குடியேற்றச் சட்டத்தின் திருத்தங்களின்படி, எந்தவொரு சூழ்நிலையிலும் ஒரு வெளிநாட்டவர் நுழைவு விசாவை தொழில் அல்லது குடியிருப்பு அனுமதியாக மாற்ற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இருப்பினும், சுற்றுலா விசாவை சலுகைக் காலத்துடன் கூடிய பணி விசாவாக மாற்ற அனுமதிக்கும் வகையில் விதிகள் திருத்தப்பட்டுள்ளன, அதன்படி, முன்னர் வசூலிக்கப்பட்ட 60 பஹ்ரைன் தினார் கட்டணம் 250 பஹ்ரைன் தினார்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2024 பிப்ரவரி 13 முதல் பஹ்ரைன் மாநிலத்தில் வேலைவாய்ப்புக்காக சுற்றுலா விசா மூலம் நுழைவதை தடை செய்ய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்திருந்தது.

அதன்படி, தொடர்புடைய சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் இந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் திகதி பஹ்ரைன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

அதன்படி, 1965 ஆம் ஆண்டு பஹ்ரைனின் குடிவரவுச் சட்டத்தின் திருத்தங்களின்படி, எந்தவொரு சூழ்நிலையிலும், அனுசரணையாளர் இல்லாத வெளிநாட்டவர் நுழைவு விசாவை பணி வதிவிட அனுமதியாக மாற்ற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இந்த சூழ்நிலையின் அடிப்படையில், பஹ்ரைனில் அதிகளவானோர் சுற்றுலா விசாக்களை பயன்படுத்தி பஹ்ரைனில் பணிபுரிவதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

எக்காரணம் கொண்டும், அனுசரணையாளர் இல்லாமலும், சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி பணியகத்தில் பதிவு செய்யாமலும் பஹ்ரைனில் வேலை தேடுவதற்காக வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என்று பணியகம் புலம்பெயர்ந்த சமூகத்தை கேட்டுக்கொள்கிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...