21 6
உலகம்செய்திகள்

சுற்றுலா விசாவை தொழில் விசாவாக மாற்ற தடை விதித்த நாடு

Share

சுற்றுலா விசாவில் பஹ்ரைனுக்கு (Bahrain) சென்று தொழில் விசாவாக மாற்ற முடியாது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

குறித்த விடயத்தை உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது என இலங்கைக்கான இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பை மேற்கோள்காட்டி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (Srilanka Bureau of Foreign Employment) தெரிவித்துள்ளது.

பஹ்ரைனின் 1965 குடியேற்றச் சட்டத்தின் திருத்தங்களின்படி, எந்தவொரு சூழ்நிலையிலும் ஒரு வெளிநாட்டவர் நுழைவு விசாவை தொழில் அல்லது குடியிருப்பு அனுமதியாக மாற்ற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இருப்பினும், சுற்றுலா விசாவை சலுகைக் காலத்துடன் கூடிய பணி விசாவாக மாற்ற அனுமதிக்கும் வகையில் விதிகள் திருத்தப்பட்டுள்ளன, அதன்படி, முன்னர் வசூலிக்கப்பட்ட 60 பஹ்ரைன் தினார் கட்டணம் 250 பஹ்ரைன் தினார்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2024 பிப்ரவரி 13 முதல் பஹ்ரைன் மாநிலத்தில் வேலைவாய்ப்புக்காக சுற்றுலா விசா மூலம் நுழைவதை தடை செய்ய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்திருந்தது.

அதன்படி, தொடர்புடைய சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் இந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் திகதி பஹ்ரைன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

அதன்படி, 1965 ஆம் ஆண்டு பஹ்ரைனின் குடிவரவுச் சட்டத்தின் திருத்தங்களின்படி, எந்தவொரு சூழ்நிலையிலும், அனுசரணையாளர் இல்லாத வெளிநாட்டவர் நுழைவு விசாவை பணி வதிவிட அனுமதியாக மாற்ற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இந்த சூழ்நிலையின் அடிப்படையில், பஹ்ரைனில் அதிகளவானோர் சுற்றுலா விசாக்களை பயன்படுத்தி பஹ்ரைனில் பணிபுரிவதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

எக்காரணம் கொண்டும், அனுசரணையாளர் இல்லாமலும், சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி பணியகத்தில் பதிவு செய்யாமலும் பஹ்ரைனில் வேலை தேடுவதற்காக வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என்று பணியகம் புலம்பெயர்ந்த சமூகத்தை கேட்டுக்கொள்கிறது.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...