tamilni 255 scaled
இந்தியாஉலகம்செய்திகள்

கனடா இந்தியா அரசுக்கிடையில் மோதல்

Share

கனடா இந்தியா அரசுக்கிடையில் மோதல்

கனடா இந்தியா அரசுகளுக்கிடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் இந்த விவகாரம் குறித்து தங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

G 20 உச்சி மாநாட்டுக்காக இந்தியா சென்ற கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கனடாவில் காலிஸ்தான் அமைப்பினர் இந்திய தூதரக அதிகாரிகளை அச்சுறுத்துதல், தூதரக அதிகாரிகளுக்கெதிரான வன்முறை முதலான விடயங்கள் குறித்துப் பேச, கனடா பிரதமர் அவமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், நாடு திரும்பிய ட்ரூடோ, கனடாவில் கொல்லப்பட்ட சீக்கியர் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலையில் இந்திய அரசாங்கத்தின் பங்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிப்படையாக குற்றம்சாட்டியிருந்தார்.

இதைத்தொடர்ந்து, மோதல் தீவிரமடைந்த நிலையில் இந்திய தூதரக அதிகாரி ஒருவரை, நாட்டை விட்டு வெளியேறும்படி கனடா அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதற்கு பதிலடியாக கனேடிய தூதரக அதிகாரி ஒருவரை இந்தியா நாட்டைவிட்டு வெளியேற்றியுள்ளது.

கனடாவின் குற்றச்சாட்டுக்கு இந்தியா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை சார்பில் ட்விட்டர் அல்லது எக்ஸில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில், கனடா பிரதமரும், கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சரும் வெளியிட்ட அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை இந்தியா நிராகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
16 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வட மாகாண வீதி அபிவிருத்திக்கு முக்கிய முன்னுரிமை: முழுமையாகப் புனரமைக்க ஆளுநர் திட்டம்

வட மாகாணத்தில் உள்ள அனைத்து வீதிகளையும் எதிர்வரும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் புனரமைத்து, போக்குவரத்து...

15 15
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதி – மனோ கணேசன் இடையிலான தொலைபேசி உரையாடல்: சந்திப்பிற்கு இணக்கம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கும் இடையில் இன்று...

14 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விவசாயிகளின் நலன் கருதி QR குறியீடு இன்றி எரிபொருள் வழங்க விசேட அனுமதி

இலங்கையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறைமைக்கு அப்பால், விவசாயிகளின் அறுவடை...

13 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்தை ஒழுங்குபடுத்துதல்: விசேட கலந்துரையாடல்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் எரிபொருள் விநியோகச் சவால்கள் குறித்து ஆராய்வதற்காக, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்...