6 32
உலகம்

இளவரசர் ஹரியின் நிதி நிலைமை குறித்து கவலை: அள்ளிக் கொடுத்த மன்னர் சார்லஸ்

Share

இளவரசர் ஹரியின் நிதி நிலைமை குறித்து கவலை: அள்ளிக் கொடுத்த மன்னர் சார்லஸ்

பிரித்தானிய இளவரசர் ஹரி ராஜ குடும்பத்தைவிட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, அவர் வருவாய்க்கு என்ன செய்வார் என மன்னர் சார்லஸ் கவலையிலிருப்பதாக ராஜ குடும்ப எழுத்தாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இளவரசர் ஹரி தன்னிடமிருக்கும் பணம் செலவழிந்துபோனால், அதற்குப் பின் என்ன செய்வார் என அவரது தந்தையான மன்னர் சார்லசுக்கு கவலை இருப்பதாக ராஜ குடும்ப எழுத்தாளரான ராபர்ட் ஜாப்சன் (Robert Jobson) என்பவர் தெரிவித்துள்ளார்.

என்றாலும், தன் பிள்ளைகள் எப்போதுமே கஷ்டப்படக்கூடாது என்னும் எண்ணம் கொண்டவர் சார்லஸ்.

ஹரி தனது தொலைக்காட்சி பேட்டிகளிலும், தன் சுயசரிதைப் புத்தகத்திலும், தன் குடும்பத்தைக் குறித்து மோசமாக எழுதியதால் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, அவரது வருவாயில் பின்னடைவு ஏற்படத் துவங்கியது.

ஆகவே, தன் மகன் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக சார்லஸ் ஹரிக்கு கணிசமான தொகை ஒன்றைக் கொடுத்ததாகத் தெரிவிக்கிறார், ராஜ குடும்ப எழுத்தாளரான ராபர்ட். அத்துடன், அவருக்கு வழங்கும் நிதி உதவியை அவர் முற்றிலும் நிறுத்திவிடவில்லை என்றும் கூறியுள்ளார் அவர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...

world 219
உலகம்செய்திகள்

அமெரிக்கா – இஸ்ரேலுக்கு ஈரான் இராணுவத் தளபதி கடும் எச்சரிக்கை: கல்லறைக்கே செல்வார்கள்!

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெறாது என்றும், ஈரானைப் பணியவைக்க...

world 210
உலகம்செய்திகள்

அமெரிக்கா – ஈரான் இடையே விரைவில் அமைதி ஒப்பந்தம்? டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே 10 நாள்...