tamilnaadi 8 scaled
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச் சூடுகள்

Share

அமெரிக்காவில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு தாக்குதலானது மனநலம் சார்ந்த சம்பவம் என அந்நாட்டின் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது எதிர்வினையை உருவாக்கும் எனவும் இப்பிரச்சினை அடிப்படையில் மனநலம் சம்பந்தப்பட்டது எனவும் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் மத்திய மேற்கு பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

மேலும் சம்பவத்தில் 5 பேர் காயமடைந்ததோடு, அதில் ஒருவர் பாடசாலை ஆசிரியர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டை நடத்திய டைலன் பட்லர் (Dylan Butler) எனும் 17 வயது மாணவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு கொண்டு உயிரிழந்துள்ளார்.

சில வருடங்களாக அமெரிக்காவில் பாடசாலை வளாகங்களில் இது போன்று நடைபெறும் துப்பாக்கிச் சூடுகளும் அதன் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.

கடந்த 2023ல், அமெரிக்காவில், பாடசாலை வளாகங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் 82 என தரவுகள் தெரிவிக்கின்றன.

இவற்றில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் அடங்கிய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் 37 என தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில், அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிட ஆதரவு தேடி வரும் விவேக் ராமசாமி, துப்பாக்கிச்சூடு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

”சமூகத்தில் உள்ள ஆழமான பிரச்சினைகளே இதற்கு காரணம். துப்பாக்கிகளின் எண்ணிக்கை அல்ல.

பிரச்சினையின் வேர் வரை சென்று அதை தீர்க்க முனையாமல் இருப்பது தவறான அணுகுமுறை. ஆனால், அதை புரிந்து கொள்ளாமல் உடனடியாக ஒரு சட்டமியற்றுவதும் நாங்களும் ஏதோ செய்து விட்டோம் என கூறுவதும் வெறும் உணர்ச்சிகரமான தீர்வு.

இன்றோ, நாளையோ “துப்பாக்கிகளை தடை செய்யுங்கள்” எனும் கூக்குரல் அதிகரிப்பதை பார்க்கத்தான் போவீர்கள்.

“காரணமின்றி செயல்படுதல்” எனும் நோய் நமது சமூகத்தின் இதயம் மற்றும் உயிரிலும் கலந்து விட்டது.” என விவேக் ராமசாமி கூறியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
Untitled 53
செய்திகள்உலகம்

உலகையே உலுக்கும் எலான் மஸ்க்கின் மெகா திட்டம்: ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் xAI நிறுவனங்கள் பங்குச் சந்தையில் தடம் பதிக்கின்றன!

உலகின் மிகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், தனது விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX)...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களுக்கு ‘ஆம்பர்’ எச்சரிக்கை: பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு!

இலங்கையின் மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் அனுராதபுர...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொருளாதார ஸ்திரத்தன்மையில் இலங்கை முன்னேற்றம்: ஜனாதிபதி அநுர குமாரவிடம் சர்வதேச நாணய நிதியம் பாராட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் பொதுச் சேவை: 42% டீசல் சேமிப்பை எட்டியது சுகாதார அமைச்சு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிசக்தி சவால்களுக்கு மத்தியில், நாட்டின்...