tamilni 328 scaled
உலகம்செய்திகள்

உக்ரைனால் கொல்லப்பட்ட ரஷ்ய கடற்படை தளபதி

Share

உக்ரைனால் கொல்லப்பட்ட ரஷ்ய கடற்படை தளபதி

உக்ரைனின் சிறப்பு தாக்குதல் நடவடிக்கையில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட கருங்கடல் கடற்படையின் தளபதி விக்டர் சோகோலோ சமீபத்தில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சருடனான சந்திப்பில் காணொளி இணைப்பு மூலம் இணைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் போர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ரஷ்யாவின் போர் விமானங்கள் தரையிறங்கும் மின்ஸ்க் கப்பல் மீது உக்ரைன் சிறப்பு தாக்குதல் நடத்தியிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கருங்கடல் கடற்படையின் தலைமையகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டதாகவும் உக்ரைன் அறிவித்திருந்தது.

அத்துடன் உக்ரைனின் இந்த சிறப்பு தாக்குதலில் கருங்கடல் கடற்படையின் தளபதி விக்டர் சோகோலோ-வும் கொல்லப்பட்டதாக உக்ரைன் தரப்புகள் தெரிவி்த்திருந்தன.

இந்நிலையில் உக்ரைனின் சிறப்பு தாக்குதலில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட கருங்கடல் கடற்படையின் தளபதி விக்டர் சோகோலோ சமீபத்தில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காணொளி இணைப்பு மூலம் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இதனை தொடர்ந்து ரஷ்யாவின் கருங்கடல் கடற்படையின் தளபதி விக்டர் சோகோலோ மரணம் குறித்த குழப்பத்தை தெளிவுபடுத்துவதாக உக்ரைனிய சிறப்பு படை தெரிவித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...