25 68453fa6a06df
உலகம்செய்திகள்

கொலம்பிய ஜனாதிபதி வேட்பாளர் மீது துப்பாக்கி சூடு

Share

கொலம்பிய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும், பழமைவாத கொலம்பிய செனட் உறுப்பினர்-மிகுவல் யூரிப் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என்ற நம்பிக்கை மேலோங்கிய நிலையில், போகோட்டா நகரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அவர் பங்கேற்றிருந்தபோதே, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உள்ளூர் ஊடக தகவல்களின்படி, அவர் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படங்கள், தலையில் கடும் காயங்களுடன், 39 வயதான ஜனாதிபதி வேட்பாளர்; இரத்தம் தோய்ந்த நிலையில் இருப்பதை காட்டுகின்றன எனினும், செனட்டரின் நிலை குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை.

செனட்டரின் எதிர்க்கட்சியான ஜனநாயக மையம், யூரிப் டர்பே மீதான தாக்குதலை கடுமையானது என்றும், ஏற்றுக்கொள்ள முடியாத வன்முறைச் செயல் என்றும் விபரித்துள்ளது.

அமெரிக்க ராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ, “செனட்டர் மிகுவல் யூரிப் மீதான படுகொலை முயற்சியை கடுமையாக கண்டித்துள்ளார்

இது ஜனநாயகத்திற்கு நேரடி அச்சுறுத்தலாகும் என்று குறிப்பிட்டுள்ள அவர், கொலம்பிய அரசாங்கத்தின்; வன்முறை கலாசாரத்தையும் விமர்சித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 684c110644e76
இலங்கைசெய்திகள்

கிழித்தெறியப்பட்ட பௌத்த தோரண பதாதைகள்! விளக்கமளித்த பெண்

தனியார் காணி ஒன்றில் பௌத்த விகாரை வடிவில் பதாதைகள் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்தது....

images 3 1
இலங்கைசெய்திகள்

அகமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே பயணி பகிர்ந்த தகவல்

உலகையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்தில் ஒரே ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்த நிகழ்வு...

25 684befed3eedb
இலங்கைசெய்திகள்

ஒபரேஷன் ரைசிங் லயன்! ஈரானை உலுக்கிய தாக்குதலால் அணு ஆயுத விளிம்பில் மத்திய கிழக்கு

அலை அலையாக வான்வழித் தாக்குதல்கள், உயர் இராணுவ மற்றும் அரசியல் அதிகாரிகளைக் கொல்வது மற்றும் இராணுவ...

images 8
இலங்கைசெய்திகள்

யாழ்.மாநகர சபையின் முதல்வர் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்ட கருத்து

இலங்கை தமிழரசுக்கட்சி முன்னிறுத்திய வேட்பாளர்களுக்கு வாக்களித்து தெரிவு நிகழ்ச்சிக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி என தமிழரசுக்...