25 68453fa6a06df
உலகம்செய்திகள்

கொலம்பிய ஜனாதிபதி வேட்பாளர் மீது துப்பாக்கி சூடு

Share

கொலம்பிய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும், பழமைவாத கொலம்பிய செனட் உறுப்பினர்-மிகுவல் யூரிப் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என்ற நம்பிக்கை மேலோங்கிய நிலையில், போகோட்டா நகரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அவர் பங்கேற்றிருந்தபோதே, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உள்ளூர் ஊடக தகவல்களின்படி, அவர் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படங்கள், தலையில் கடும் காயங்களுடன், 39 வயதான ஜனாதிபதி வேட்பாளர்; இரத்தம் தோய்ந்த நிலையில் இருப்பதை காட்டுகின்றன எனினும், செனட்டரின் நிலை குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை.

செனட்டரின் எதிர்க்கட்சியான ஜனநாயக மையம், யூரிப் டர்பே மீதான தாக்குதலை கடுமையானது என்றும், ஏற்றுக்கொள்ள முடியாத வன்முறைச் செயல் என்றும் விபரித்துள்ளது.

அமெரிக்க ராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ, “செனட்டர் மிகுவல் யூரிப் மீதான படுகொலை முயற்சியை கடுமையாக கண்டித்துள்ளார்

இது ஜனநாயகத்திற்கு நேரடி அச்சுறுத்தலாகும் என்று குறிப்பிட்டுள்ள அவர், கொலம்பிய அரசாங்கத்தின்; வன்முறை கலாசாரத்தையும் விமர்சித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 68492b8d2bd89
உலகம்செய்திகள்

இலங்கையில் உள்ள இஸ்ரேலிய சபாத் மையங்களுக்கு விசேட பாதுகாப்பு

நாட்டில் வசிக்கும் இஸ்ரேலிய பிரஜைகளின் மத, பொழுதுபோக்கு மற்றும் உணவு மற்றும் பான நடவடிக்கைகளுக்காக நிறுவப்பட்ட...

25 684929aae08be
இலங்கைசெய்திகள்

மாநகரசபையொன்றின் அதிகாரத்தை முழுமையாக கைப்பற்றிய அநுர தரப்பு

பண்டாரவளை மாநகர சபையின் மேயர் பதவியை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றிக் கொண்டுள்ளது. இன்று (11)...

25 6848f357eab31 1
இலங்கைசெய்திகள்

அநுர அரசின் மற்றுமொரு அதிரடி – பதற்றத்தில் பல சிறை அதிகாரிகள்

விசேட தினங்களில் ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட கைதிகளின் பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்படாத கைதிகள் சட்டவிரோதமாக...

25 684921214c034
இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய பொதுமன்னிப்பு விவகாரம்! நீதிமன்றில் முன்னிலையாவாரா அதுல

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு பெற்ற பின்னர் சர்ச்சைக்குரிய வகையில் அனுராதபுரம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அதுல திலகரத்ன,...