OIP 20 scaled
உலகம்செய்திகள்

வயிற்றுவலியுடன் வீடு திரும்பிய ஒன்பதாம் வகுப்பு மாணவி: மருத்துவமனையில் தெரியவந்த அதிர்ச்சித் தகவல்

Share

ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருத்தி, வயிற்றுவலியுடன் பள்ளியிலிருந்து வீடு திரும்ப, மருத்துவமனையில் அனைவருக்கும் ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

கர்நாடகா மாநிலத்தில், அரசு உண்டுறை பள்ளி ஒன்றில் தங்கிப் படித்துக்கொண்டிருந்த ஒரு ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருத்தி, வயிற்றுவலியுடன் வீடு திரும்ப, அவளது பெற்றோர் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மருத்துவமனையில் மருத்துவர்கள் அவளுக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது அந்த 14 வயது மாணவி 8 மாதங்கள் கர்ப்பமாக இருந்தது தெரியவரவே, அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக பொலிசாருக்கு தகவலளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அந்தக் குழந்தையை வெளியே எடுத்தனர். அந்த மாணவியும், குழந்தையும் நலமாக உள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்த மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார் என்பதைக் கண்டறிவதற்காக பொலிசார் அவளிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவள் தனது சீனியரான ஒரு மாணவன்தான் தனது கர்ப்பத்துக்குக் காரணம் என கூறியுள்ளாள்.

பொலிசார் அவனிடம் விசாரித்தபோது அவன் அதை மறுத்துள்ளான். மீண்டும் அந்த மாணவியிடம் விசாரிக்கும்போது, மற்றொரு மாணவனின் பெயரை அந்த மாணவி கூறியுள்ளாள்.

ஆகவே, அவளது கர்ப்பத்துக்கு யார் காரணம் என்பதைக் கண்டறிய பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். இதற்கிடையில், படிக்க அனுப்பிய மகள், பிள்ளையுடம் திரும்பி வந்ததால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள மாணவியின் பெற்றோருக்கு மன நல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...