6 27
உலகம்செய்திகள்

சூடானில் தீவிரமடையும் உள்நாட்டு போர் : இராணுவ தாக்குதலில் 127 பேர் உயிரிழப்பு!

Share

சூடானில் தீவிரமடையும் உள்நாட்டு போர் : இராணுவ தாக்குதலில் 127 பேர் உயிரிழப்பு!

சூடானில் (Sudan) உள்நாட்டு கலவரம் நீடித்து வரும் நிலையில் துணை இராணுவப்படை வீரர்களின் முகாம்கள் மீது குண்டு வீசப்பட்டது. இந்தக் குண்டு வீச்சில் 127 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆபிரிக்க நாடான சூடானில் கடந்த 2021 ஆம் ஆண்டு இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் அங்கு ஆட்சியை நடத்தி வருகிறார்.

துணை இராணுவ படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை இராணுவத்துடன் இணைக்க இராணுவ தளபதி ஜெனரல் படக் அல்- பர்ஹன் முயற்சி மேற்கொண்டார்.

இதற்கு துணை இராணுவ படையின் அதிவிரைவு ஆதரவுபடையினர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இராணுவத்திற்கும் துணை இராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

2022 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு போராக மாறி கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. சுமார் 2 ஆண்டுகளாக நீடித்துவரும் இந்த போரில் பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

அங்குள்ள கிராமங்களை துணை இராணுவ படை வீரர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இராணுவ ஆட்சியினைக் கவிழ்க்க சதிசெய்து வருகின்றனர்.

இந்த நிலையில் துணை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள கிராமங்களை குறிவைத்து இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 127 பேர் உயிரிழந்தனர். இதற்கு துணை இராணுவம் பதிலடி கொடுக்கும் என்பதால் உள்நாட்டு போர் தீவிரம் அடையும் என தெரிவிக்கப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 89
செய்திகள்உலகம்

பேஸ்புக் லைக் மற்றும் கமெண்ட் பட்டன்கள் 2026 பெப்ரவரி முதல் நிறுத்தப்படும்!

மெட்டா நிறுவனம், வெளிப்புற வலைத்தளங்களில் (Third-party websites) பயன்படுத்தப்படும் பிரபலமான பேஸ்புக் லைக் (Like) மற்றும்...

1762967383 Galle Prison 6
செய்திகள்இலங்கை

காலி சிறைச்சாலையை இடமாற்றம் செய்ய விவாதம்: நகரின் 4 ஏக்கர் வணிக நிலத்தை வளர்ச்சிக்குப் பயன்படுத்தத்…

காலி சிறைச்சாலையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வது குறித்து காலி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில்...

MediaFile 3 2
விளையாட்டுசெய்திகள்

ஐபிஎல் 19ஆவது சீசன் மினி ஏலம் அபுதாபியில் நடத்தத் திட்டம்! – டிசம்பர் 15 அல்லது 16ஆம் திகதி நடைபெறும் என எதிர்பார்ப்பு!

19ஆவது ஐ.பி.எல். (IPL) தொடர் அடுத்த வருடம் நடைபெற உள்ள நிலையில், அதற்கான வீரர்களின் மினி...