tamilnid 21 scaled
உலகம்செய்திகள்

நத்தார் கொண்டாட்டத்தை புறக்கணித்த இயேசுவின் பிறப்பிடம்

Share

நத்தார் கொண்டாட்டத்தை புறக்கணித்த இயேசுவின் பிறப்பிடம்

உலகம் முழுவதும் நத்தார் கொண்டாட்டத்தில் மூழ்கி இருக்கும் வேளையில் இயேசு பிறந்த பெத்லகேமில் இந்த ஆண்டு நத்தார் கொண்டாட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது.

காசாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெத்லகேமில் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாட்டத்தை கைவிட்டுள்ளனர்.

இஸ்ரேல் நடத்திய தாக்குதல்

பாலஸ்தீனம் முழுவதும் உள்ள தேவாலயங்கள் நத்தார் கொண்டாட்டங்களை இரத்து செய்த நிலையில், “இனப்படுகொலையை இப்போதே நிறுத்துங்கள். இன்று இயேசு பிறந்திருந்தால், அவர் காசாவில் இடிபாடுகளுக்கு அடியில் பிறந்திருப்பார்” என்று ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பெத்லகேமில் உள்ள தனது தேவாலயத்தில் இருந்து பாதிரியார் முன்தர் ஐசக் தனது சபையில் கூறியுள்ளார்.

இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 166 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், 384 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 7ஆம் திகதி முதல் இன்று வரை இஸ்ரேலிய தாக்குதல்களில் 20,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
16 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சேவையாளர்களுக்கான 2026 வருடாந்த இடமாற்றங்கள்: ஏப்ரல் 2 முதல் அமுல்!

அரச சேவை ஆணைக்குழுவினால் 2026 ஆம் ஆண்டிற்காகத் தீர்மானிக்கப்பட்ட வருடாந்த இடமாற்றங்கள், ஏப்ரல் மாதம் 02...

15 14
செய்திகள்உலகம்

போலி ஆளில்லா வானூர்திகள் மூலம் பிராந்தியத்தில் பதற்றத்தை உருவாக்கும் முயற்சி: ஈரான் குற்றச்சாட்டு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் ‘ஷாஹெட்’ (Shahed)...

14 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேசிய எரிபொருள் QR முறை: தொழில்நுட்பச் சிக்கல்களைத் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை

இலங்கையில் இன்று (மார்ச் 15) காலை 6:00 மணி முதல் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR)...

13 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களின் சில பகுதிகளில் நீர் விநியோகத் தடை!

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, களுத்துறை மற்றும் காலி...