உலகம்செய்திகள்

சிரியாவில் எரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம்! போராட்டத்தில் குதித்த கிறிஸ்தவர்கள்

Share
19 24
Share

சிரியாவில் எரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம்! போராட்டத்தில் குதித்த கிறிஸ்தவர்கள்

சிரியாவில் வீதியோரம் வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் மரம் எரிக்கப்பட்டதை அடுத்து, அந்நாட்டின் சிறுபான்மையினரான கிறிஸ்தவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

மத்திய சிரியாவின் சுகைலாபியா(Suqaylabiyah) நகரில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசித்து வரும் நிலையில், அங்கு வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் மரம் தீ மூட்டி எரிக்கப்படுவது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியது.

இதனையடுத்து, சிறுபான்மையினரை பாதுகாக்க புதிய இஸ்லாமிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டம் வெடித்துள்ளது.

ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தை வீழ்த்தி எழுச்சிக்கு தலைமை தாங்கிய இஸ்லாமியப் பிரிவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம், சிரியாவில் மத மற்றும் இன சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாப்பதாக உறுதியளித்திருந்தது.

இந்நிலையில், கிறிஸ்துமஸ் மரத்தை தீ மூட்டுவதற்காக முகமூடி அணிந்தவர்கள் மரத்தில் திரவமொன்றை ஊற்றுவது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...