தைவான் வான்வெளியில் நுழைந்த 42 சீன போர் விமானங்களால் பரபரப்பு
உலகம்செய்திகள்

தைவான் வான்வெளியில் நுழைந்த 42 சீன போர் விமானங்களால் பரபரப்பு

Share

தைவான் வான்வெளியில் நுழைந்த 42 சீன போர் விமானங்களால் பரபரப்பு

தைவான் வான்வெளி பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்து போர் பயிற்சியில் ஈடுபட்ட 42 சீன போர் விமானங்களினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தைவான் நாட்டை தனது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பிராந்திய பகுதியாக சீனா கூறி வரும் நிலையில், தனி சுதந்திர நாடாக தைவான் செயல்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில், தைவானை சுற்றியுள்ள பகுதிகளில் சீனா தனது வான் மற்றும் கடல்வழி ரோந்து பணிகள் மற்றும் இராணுவ பயிற்சிகளை தொடங்கியுள்ள நிலையில் இவ்வாறு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தைவான் நாட்டின் வான்வெளி பாதுகாப்பு மண்டலத்திற்குள் சீனா பயிற்சியில் ஈடுபட்டுள்ளமைக்கு தைவான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், தைவான் நாட்டிற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஆதரவுகரம் நீட்டியுள்ளதுடன், இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தைவான் நாட்டின் வான்வெளி பாதுகாப்பு மண்டலத்திற்குள் சீனா பயிற்சியில் ஈடுபட்டுள்ளமைக்கு தைவான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இது தொடர்பில் தைவான் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எங்களது ஆயுத படைகள் 42 சீன போர் விமானங்களை கண்டறிந்துள்ளது. அவற்றில் கே.ஜே.-500, ஒய்-9, ஜே-10, ஜே-11, ஜே-16, சூ-30 உள்ளிட்டவையும் அடங்கும். இவற்றில் 26 விமானங்கள் தைவான் ஜலசந்தியின் இடைக்கோட்டை கடந்து சென்றுள்ளன. இவை தவிர 8 கப்பல்களுடன் சேர்ந்து விமானங்கள், கூட்டு ரோந்து பணியையும் மேற்கொண்டுள்ளன.

இவற்றை எங்களுடைய விமானம், கப்பல் மற்றும் தரை சார்ந்த ராக்கெட் சாதனங்களை கொண்டு கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என அந்த தகவல் தெரிவிக்கின்றது.

சீனாவின் சமீபத்திய இந்த இராணுவ பயிற்சிகளுக்கு தைவான் பாதுகாப்பு அமைச்சகம் கண்டனம் தெரிவித்து உள்ளதுடன், தூண்டிவிடும் அணுகுமுறையை சீனா கடைப்பிடிக்கின்றது எனவும் கூறியுள்ளது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...