2 2 scaled
உலகம்செய்திகள்

மனித இனத்திற்கே அச்சுறுத்தலாகும் ஆயுதம்: விற்பனை செய்த சீனா

Share

மனித இனத்திற்கே அச்சுறுத்தலாகும் ஆயுதம்: விற்பனை செய்த சீனா

தன்னிச்சையாக முடிவெடுக்கும் கொலைகார ரோபோக்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு சீனா விற்பனை செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் இந்த கொலைகார ட்ரோன்களை உலகின் பல நாடுகள் மற்றும் ராணுவங்கள் வாங்கிக் குவிப்பதாக கூறப்படுகிறது. போர்க்களத்தில் இந்த ரோபோக்களை களமிறக்குவது, உண்மையில் கொடூரமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றே அஞ்சப்படுகிறது.

AI தொழில்நுட்பத்தில் செயல்படும் இந்த கொலைகார ரோபோக்கள் அல்லது ட்ரோன்களை மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியா முதல் பர்மா வரையிலும், ஈராக்கு முதல் எத்தியோப்பியா வரையிலும் சீனா ஏற்றுமதி செய்துள்ளது.

ஆனால் தற்போது சவுதி அரேபியா தொடர்பில் கடும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக சமீபத்தில் சீனாவின் இந்த கொலைகார ரோபோக்களை சவுதி முன்னெடுக்கும் கூட்டணி ஏமனில் களமிறக்க, இது கடந்த எட்டு ஆண்டுகளில் 8,000க்கும் மேற்பட்ட யேமன் குடிமக்களை கொன்றுள்ளது என தெரியவந்துள்ளது.

மேலும், ஐ.எஸ் தீவிரவாத குழுவினருக்கு எதிராக 260 ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்ததில், வெற்றி சதவீதம் 100 என்றே பகீர் தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் இந்த கொலைகார ட்ரோன் தொடர்பில் 2019ல் அவுஸ்திரேலிய ஆய்வாளர் ஒருவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அதாவது அந்த ட்ரோன் தாக்குதலில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ள இயலாமல் போகும் எனவும், தாக்குதல் ஆரம்பித்தவுடன், போர்க்களத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் இறப்பதை அந்த ட்ரோன் உறுதி செய்யும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...