fde2cc80 ce40 4967 99db 879bd5c05d3d
உலகம்செய்திகள்

கோவில்களுக்கு படையெடுக்கும் சீன இளைஞர்கள்

Share

தடுமாறும் பொருளாதார நிலைமையில் வேலை தேடுவது என்பது கடினமான ஒன்றாக இருப்பதால் சீன இளைஞர்கள் தற்போது கோவில்களுக்கு படையெடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவிலுக்கு படையெடுக்கும் மக்கள்

சீன பயண தளமான குனார் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்த ஆண்டில் முதல் காலாண்டில் கோவிலுக்கு படையெடுத்துள்ள மக்களின் எண்ணிக்கை 367 சதவீதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

கொரோனா ஊரடங்குகளுக்கு பின்னர் சுற்றுலா மற்றும் கலாச்சார மையங்கள் பல திறந்து செயல்பட தொடங்கியுள்ளதும் இந்த எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

ஆனால் மத அடிப்படையிலான தலங்களுக்கும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஜனவரி மற்றும் மே மாதங்களில் ஏறக்குறைய 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் சிச்சுவானில் உள்ள எமி மலையை பார்வையிட்டுள்ளனர். சீன பௌத்தத்தின் நான்கு புனித மலைகளில் ஒன்று இந்த எமி.

வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை

2019ல் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் பார்வையாளர்கள் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இன்னொரு பயண இணைய தளம் குறிப்பிடுகையில், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் கோயிலுக்குச் சென்றவர்களில் பாதி பேர் 1990க்குப் பிறகு பிறந்தவர்கள் என தெரிவித்துள்ளது.

சீனாவில் மே மாதத்தில் 16 முதல் 24 வயதுடையவர்களில் வேலையற்றோர் எண்ணிக்கை 20.8% என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் சிக்கலான பொருளாதாரம் கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் கல்வி, கட்டுமானம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரப்பூர்வமாக நாத்திகத்தை பின்பற்றி வந்தாலும், பலர் தேவைப்படும் காலங்களில் பண்டைய நடைமுறைகளுக்கு திரும்புவதாகவே கூறப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
05 19
செய்திகள்உலகம்

டியாகோ கார்சியா மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: அமெரிக்காவின் போர் வியூகத்தை மாற்றும் புதிய திருப்பம்!

இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள அமெரிக்க-பிரித்தானிய கூட்டு இராணுவத் தளமான டியாகோ கார்சியாவை (Diego Garcia) இலக்கு...

04 19
செய்திகள்இலங்கைஉலகம்

கியூபாவில் மின்சாரத் தடை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு: குடிநீரின்றித் தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள்!

கியூபாவில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை...

02 19
செய்திகள்உலகம்

யுத்த நிறுத்தத்தை ஏற்க முடியாது, போர் முழுமையாக முடிவுக்கு வரவேண்டும்: ஈரான் வெளியுறவு அமைச்சர்!

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான தற்போதைய இராணுவ மோதல்கள் முடிவுக்கு வர வேண்டுமாயின், வெறும்...

01 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் சடலமாக மீட்பு: குடும்பத் தகராறில் கொலையா?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றி வந்த பெண் ஒருவர், தென்மராட்சி,...