சீனாவின் வெளிவிவகார அமைச்சர் மாயம்
உலகம்செய்திகள்

சீனாவின் வெளிவிவகார அமைச்சர் மாயம்

Share

சீனாவின் வெளிவிவகார அமைச்சர் மாயம்

சீன வெளியுறவு அமைச்சர் குய்ன் காங் திடீரென காணாமல் போன சம்பவம் அந்நாட்டிலும், உலக அளவிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீன ஜனாதிபதியாக செயற்படும் ஜிஜிங்பிங் இன் அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக குய்ன் காங் செயற்பட்டு வருகிறார்.

இவர் கடந்த மாதம் 24 ஆம் திகதி முதல் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமலும், செய்தியாளர்களை சந்திக்காமலும், ஜனாதிபதியின் ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்காமலும் இருந்துள்ளார்.

இதனையடுத்து அவர் திடீரென காணாமல்போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்ஜிங்கில் இராஜதந்திர உயர்மட்ட சந்திப்புகள் நடைபெற்றிருந்தன. இருப்பினும், சீனாவின் வெளியுறவு அமைச்சர் குய்ன் காங் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக பொதுமக்களின் பார்வைக்கு வரவில்லை என கூறப்படுகின்றது.

மேலும், நீண்ட காலமாக பொது வெளியில் வராதது அவர் இருக்கும் இடத்தைப் பற்றிய சந்தேகங்களை உலகிற்கு தோற்றுவித்துள்ளது.

இந்நிலையில் ஜூன் 25 ஆம் திகதி ரஷ்யா, வியட்நாம் மற்றும் இலங்கை நாடுகளை சேர்ந்த சகாக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் இருந்து பொது வெளியில் வரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், மாஸ்கோவிற்கு எதிரான வாக்னர் கூலிப்படைக் குழுவின் கைவிடப்பட்ட கிளர்ச்சிக்கு 48 மணி நேரத்திற்குள் பெய்ஜிங்கிற்கு விஜயம் செய்த ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ உடனான சந்திப்பின்போதே அரச ஊடகத்தில் கின் இறுதியாக தோன்றியுள்ளார்.

அத்துடன் ஜூலை 4 அன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் மற்றும் கின் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்றை திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் சில நாட்களின் எவ்வித விளக்கமும் இல்லாமல் சீனா பேச்சுவார்த்தையை ரத்து செய்ததாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...