சீனாவின் வெளிவிவகார அமைச்சர் மாயம்
உலகம்செய்திகள்

சீனாவின் வெளிவிவகார அமைச்சர் மாயம்

Share

சீனாவின் வெளிவிவகார அமைச்சர் மாயம்

சீன வெளியுறவு அமைச்சர் குய்ன் காங் திடீரென காணாமல் போன சம்பவம் அந்நாட்டிலும், உலக அளவிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீன ஜனாதிபதியாக செயற்படும் ஜிஜிங்பிங் இன் அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக குய்ன் காங் செயற்பட்டு வருகிறார்.

இவர் கடந்த மாதம் 24 ஆம் திகதி முதல் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமலும், செய்தியாளர்களை சந்திக்காமலும், ஜனாதிபதியின் ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்காமலும் இருந்துள்ளார்.

இதனையடுத்து அவர் திடீரென காணாமல்போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்ஜிங்கில் இராஜதந்திர உயர்மட்ட சந்திப்புகள் நடைபெற்றிருந்தன. இருப்பினும், சீனாவின் வெளியுறவு அமைச்சர் குய்ன் காங் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக பொதுமக்களின் பார்வைக்கு வரவில்லை என கூறப்படுகின்றது.

மேலும், நீண்ட காலமாக பொது வெளியில் வராதது அவர் இருக்கும் இடத்தைப் பற்றிய சந்தேகங்களை உலகிற்கு தோற்றுவித்துள்ளது.

இந்நிலையில் ஜூன் 25 ஆம் திகதி ரஷ்யா, வியட்நாம் மற்றும் இலங்கை நாடுகளை சேர்ந்த சகாக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் இருந்து பொது வெளியில் வரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், மாஸ்கோவிற்கு எதிரான வாக்னர் கூலிப்படைக் குழுவின் கைவிடப்பட்ட கிளர்ச்சிக்கு 48 மணி நேரத்திற்குள் பெய்ஜிங்கிற்கு விஜயம் செய்த ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ உடனான சந்திப்பின்போதே அரச ஊடகத்தில் கின் இறுதியாக தோன்றியுள்ளார்.

அத்துடன் ஜூலை 4 அன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் மற்றும் கின் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்றை திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் சில நாட்களின் எவ்வித விளக்கமும் இல்லாமல் சீனா பேச்சுவார்த்தையை ரத்து செய்ததாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...