24 662700847f865
உலகம்செய்திகள்

பலவீனமாக உள்ள நாணயம்… தங்கத்தை வாங்கி குவிக்கும் சீன மக்கள்: வெளிவரும் புதிய தகவல்

Share

பலவீனமாக உள்ள நாணயம்… தங்கத்தை வாங்கி குவிக்கும் சீன மக்கள்: வெளிவரும் புதிய தகவல்

உலக அளவில் தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் சீன மக்கள் தொடர்ச்சியாக தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தங்கத்தை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான சீனா, தற்போது அதிகம் வாங்கும் நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. சீனாவும் இந்தியாவும் பொதுவாக உலகின் மிகப்பெரிய தங்கம் வாங்கும் நாடுகள் என்றே அறியப்படுகிறது.

கடந்த ஆண்டு நகைகள், தங்கக் கட்டிகள் மற்றும் தங்க நாணயங்களின் சீன நுகர்வு அதிகரித்ததால் தங்கத்தின் விலை உயர்ந்தது. இந்த ஆண்டும் தங்க நுகர்வு அதிகரித்துள்ளது.

சீனாவின் தங்க நகைகளின் தேவை 10 சதவிகிதம் உயர்ந்துள்ளது, இந்தியாவின் தங்க நகை தேவை 6 சதவிகிதம் சரிந்துள்ளது. சீன தங்கக் கட்டிகள் மற்றும் நாணய முதலீடுகள் 28 சதவிகிதம் அதிகரித்து உள்ளன.

உலக அளவில் எழுந்துள்ள போர் சூழல்களால் மூன்றாம் உலகப்போர் வர வாய்ப்புள்ளதால் சீனா இந்த முதலீட்டை மேற்கொள்கிறதோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சீன மக்கள் மட்டுமின்றி, மத்திய வங்கியும் பெருமளவிலான தங்கத்தை வாங்கிக் குவிப்பதாக கூறப்படுகிறது. உலக தங்க கவுன்சிலின் தரவுகளின் படி, 2023ல் சீனாவின் மத்திய வங்கி 225 டன் தங்கத்தை வாங்கியது.

கடந்த மாதம், சீனாவின் தங்கம் கையிருப்பு 5 டன்கள் உயர்ந்து, நாட்டின் மொத்த கையிருப்பு 2,262 டன்களாக அதிகரித்துள்ளது.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...