24 662700847f865
உலகம்செய்திகள்

பலவீனமாக உள்ள நாணயம்… தங்கத்தை வாங்கி குவிக்கும் சீன மக்கள்: வெளிவரும் புதிய தகவல்

Share

பலவீனமாக உள்ள நாணயம்… தங்கத்தை வாங்கி குவிக்கும் சீன மக்கள்: வெளிவரும் புதிய தகவல்

உலக அளவில் தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் சீன மக்கள் தொடர்ச்சியாக தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தங்கத்தை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான சீனா, தற்போது அதிகம் வாங்கும் நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. சீனாவும் இந்தியாவும் பொதுவாக உலகின் மிகப்பெரிய தங்கம் வாங்கும் நாடுகள் என்றே அறியப்படுகிறது.

கடந்த ஆண்டு நகைகள், தங்கக் கட்டிகள் மற்றும் தங்க நாணயங்களின் சீன நுகர்வு அதிகரித்ததால் தங்கத்தின் விலை உயர்ந்தது. இந்த ஆண்டும் தங்க நுகர்வு அதிகரித்துள்ளது.

சீனாவின் தங்க நகைகளின் தேவை 10 சதவிகிதம் உயர்ந்துள்ளது, இந்தியாவின் தங்க நகை தேவை 6 சதவிகிதம் சரிந்துள்ளது. சீன தங்கக் கட்டிகள் மற்றும் நாணய முதலீடுகள் 28 சதவிகிதம் அதிகரித்து உள்ளன.

உலக அளவில் எழுந்துள்ள போர் சூழல்களால் மூன்றாம் உலகப்போர் வர வாய்ப்புள்ளதால் சீனா இந்த முதலீட்டை மேற்கொள்கிறதோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சீன மக்கள் மட்டுமின்றி, மத்திய வங்கியும் பெருமளவிலான தங்கத்தை வாங்கிக் குவிப்பதாக கூறப்படுகிறது. உலக தங்க கவுன்சிலின் தரவுகளின் படி, 2023ல் சீனாவின் மத்திய வங்கி 225 டன் தங்கத்தை வாங்கியது.

கடந்த மாதம், சீனாவின் தங்கம் கையிருப்பு 5 டன்கள் உயர்ந்து, நாட்டின் மொத்த கையிருப்பு 2,262 டன்களாக அதிகரித்துள்ளது.

Share
தொடர்புடையது
IMG 9924 1024x683 1
செய்திகள்உலகம்

சூடானில் மார்ச் மாதத்துடன் உணவு இருப்பு தீரும் அபாயம்: 700 மில்லியன் டொலர் அவசர நிதியைக் கோருகிறது ஐ.நா!

உள்நாட்டுப் போரினால் பேரழிவைச் சந்தித்துள்ள சூடானில், உடனடியாகக் கூடுதல் நிதி உதவி வழங்கப்படாவிட்டால் மிக மோசமான...

10aa5a71cfd76011153a66552523da5f7560cde2db35ee6d414158cd57f94959
உலகம்செய்திகள்

டோக்கியோவில் மின்தடையால் ரயில் சேவைகள் முடக்கம்: 6.7 லட்சம் பயணிகள் பாதிப்பு!

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இன்று (16) ஏற்பட்ட திடீர் மின்தடை மற்றும் தீ விபத்து காரணமாக...

1735040735 c
செய்திகள்இலங்கை

கிராம அலுவலர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை ஜனவரி 20-ல் ஆஜர்ப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் க....

Keheliya Rambukwella
செய்திகள்இலங்கை

கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை: நீதவான் நீதிமன்ற வழக்கு முடிவு!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது புதல்வர் ரமித் ரம்புக்வெல்ல மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகப்...