AqC5P5TZdBNogwEjdlRj 1
உலகம்செய்திகள்

கஞ்சா பிஸ்கட் சாப்பிட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

Share

இஸ்ரேலில் கஞ்சா பிஸ்கட் சாப்பிட்ட குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு மற்றும் ஆறு வயதுடைய சகோதரர்கள், கஞ்சா பிஸ்கட்களை சாப்பிட்டுவிட்டு, ராமத் கானின் டெல் ஹாஷோமர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகள் தவறுதலாக அந்த பிஸ்கட்களை சாப்பிட்டு, மயக்கமடைந்து சுருண்டு விழுந்ததாக குழந்தைகளின் தாய கூறினார். மூத்த மகன் ஒரு முழு பிஸ்கட்டையும் சாப்பிட்டதாகவும், 2 வயது குழந்தை பாதி சாப்பிட்டபோதே மயங்கியதாக அவர் கூறினார்.

தற்போது ஆறு வயது குழந்தை மிதமான நிலையில் இருப்பதாகவும், இரண்டு வயது குழந்தை ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கஞ்சா எந்த வடிவத்தில் சாப்பிட்டாலும் அது குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும். அத்தகைய உண்ணக்கூடியவை மற்ற மருந்துகள் மற்றும் நச்சுத்தன்மையுள்ள பொருட்கள் என குழந்தைகளிடமிருந்து பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும் என்று குழந்தை மருத்துவர்கள் கூறுகின்றனர்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...