3 2 scaled
உலகம்செய்திகள்

ஆணழகன் போட்டிக்கு தயாரான ஜிம் பயிற்சியாளர் மயங்கி விழுந்து மரணம்!

Share

ஆணழகன் போட்டிக்கு தயாரான ஜிம் பயிற்சியாளர் மயங்கி விழுந்து மரணம்!

சென்னையில் ஆணழகன் போட்டிக்கு தயாராகிக் கொண்டிருந்த ஜிம் பயிற்சியாளர் ஒருவர், குளியறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொரட்டூர் பகுதியில் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக பணியாற்றி வந்தவர் யோகேஷ்.

41 வயதான இவர் ஆணழகன் போட்டிக்காக தயாராகி வந்துள்ளார். இந்த உடற்பயிற்சி செய்தபோது யோகேஷ் சோர்வடைந்துள்ளார்.

இதனால் அவர் குளிக்க சென்றுள்ளார். ஆனால் அவர் நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. இதனால் ஜிம்மில் இருந்தவர்கள் சந்தேகமடைந்துள்ளனர்.

அதன் பின்னர் குளியறை கதவை திறந்து பார்த்தபோது யோகேஷ் மயங்கி கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர். அங்கு யோகேஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

ஜிம் பயிற்சியாளர் உடற்பயிற்சிக்கு பின் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
25 1
இலங்கைசெய்திகள்

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

உலகில் தங்கத்தின் விலை முதல் முறையாக ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது. இத்தகவலை...

24 1
இலங்கைசெய்திகள்

எண்பது மில்லியனுக்கு விற்கப்பட்ட நாடாளுமன்ற ஆசனம்

இலங்கையின் நாடாளுமன்ற ஆசனத்தை எண்பது மில்லியன் ரூபாய்க்கு விற்ற நபர் ஒருவர் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு...

23 1
இலங்கைசெய்திகள்

மின் கட்டண திருத்தம் குறித்து இன்று முக்கிய நகர்வு

இலங்கை மின்சார சபை (CEB), இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) சமர்ப்பித்த மின்சார கட்டண...

22 1
இலங்கைசெய்திகள்

பேருந்தில் பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு மர்ம நபரால் ஏற்பட்ட விபரீதம்

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையை திணித்துவிட்டு நபரொருவர் தப்பிச்சென்ற...