3 2 scaled
உலகம்செய்திகள்

ஆணழகன் போட்டிக்கு தயாரான ஜிம் பயிற்சியாளர் மயங்கி விழுந்து மரணம்!

Share

ஆணழகன் போட்டிக்கு தயாரான ஜிம் பயிற்சியாளர் மயங்கி விழுந்து மரணம்!

சென்னையில் ஆணழகன் போட்டிக்கு தயாராகிக் கொண்டிருந்த ஜிம் பயிற்சியாளர் ஒருவர், குளியறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொரட்டூர் பகுதியில் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக பணியாற்றி வந்தவர் யோகேஷ்.

41 வயதான இவர் ஆணழகன் போட்டிக்காக தயாராகி வந்துள்ளார். இந்த உடற்பயிற்சி செய்தபோது யோகேஷ் சோர்வடைந்துள்ளார்.

இதனால் அவர் குளிக்க சென்றுள்ளார். ஆனால் அவர் நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. இதனால் ஜிம்மில் இருந்தவர்கள் சந்தேகமடைந்துள்ளனர்.

அதன் பின்னர் குளியறை கதவை திறந்து பார்த்தபோது யோகேஷ் மயங்கி கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர். அங்கு யோகேஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

ஜிம் பயிற்சியாளர் உடற்பயிற்சிக்கு பின் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...