வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட இந்திய விண்கலம் சந்திரயான்-3
இந்தியாஉலகம்செய்திகள்

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட இந்திய விண்கலம் சந்திரயான்-3

Share

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட இந்திய விண்கலம் சந்திரயான்-3

இந்தியாவில் சந்திரயான்-3 எனும் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டமை வரலாற்றின் முக்கிய நிகழ்வாக பதிவாகியுள்ளது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆய்வு மையத்தின் இரண்டாவது தளத்திலிருந்து 14.07.2023 சரியாக பிற்பகல் 2.35 மணிக்கு இந்த விண்கலம் ஏவப்பட்டது.

தற்போது பூமியிலிருந்து வெற்றிகரமாகப் பயணித்து 179 கி.மீ. தொலைவில், நீள் வட்டப்பாதையில் சந்திரயான் – 3 விண்கலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ரஷியா, சீனாவை தொடா்ந்து இந்தியா மூன்றாவது முறையாக நிலவை ஆய்வு செய்ய முன்னெடுத்துள்ள இந்த முயற்சி, உலக நாடுகளின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈா்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சியை இஸ்ரோ தளத்தில் முன்பதிவு செய்து நேரடியாக பார்வையிட்டுள்ளனர்.

சந்திரயான்-3 திட்டம் சுமார் இந்திய மதிப்பின்படி 615 கோடி ரூபாயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக மொத்தம் 3,895 கிலோ எடையில் வடிவமைக்கப்பட்ட சந்திரயான் -3 வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த விண்கலம் ஆகஸ்ட் மாத இறுதியில் நிலவில் தரையிரங்கும் எனவும் மொத்தமாக 14 நாட்கள் நிலவின் தன்மையையும், சூழலையும் ஆய்வு செய்ய உள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த விண்கலத்தில் மொத்தம் 7 விதமான ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை நிலவுக்கு சென்றவுடன் தனித்தனியாக ஆய்வுகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 34
செய்திகள்இந்தியா

சாத்தான்குளம் வழக்கு: 9 காவல்துறை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

இந்தியாவையே உலுக்கிய தமிழ்நாட்டின் சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 காவல்துறை அதிகாரிகளுக்கும்...

world 33
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் கையிருப்பு சொத்துக்கள் மார்ச் மாதத்தில் வீழ்ச்சி: மத்திய வங்கி வெளியிட்ட புதிய அறிக்கை!

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு 2026 மார்ச் மாத இறுதியில் 3.5 சதவீதம் வரை...

world 32
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கில் அமைதி நிலவ வேண்டும்: ஜனாதிபதி அநுரகுமார வலியுறுத்தல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் தணிந்து விரைவில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே...

world 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆற்றில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு: அடையாளம் காண்பதில் சிக்கல்!

நோர்வூட் பகுதியில் பாயும் கெசல்கமுவ ஆற்றில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் இன்று (ஏப்ரல்...