6 5 scaled
உலகம்செய்திகள்

காசா மீது குண்டு வீசுவதை நிறுத்து! லண்டனில் குவிந்த லட்சக்கணக்கான மக்கள்

Share

காசா மீது குண்டு வீசுவதை நிறுத்து! லண்டனில் குவிந்த லட்சக்கணக்கான மக்கள்

பிரித்தானியாவின் லண்டன் நகரில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக லட்சக்கணக்கான மக்கள் திரண்டு போர் நிறுத்த கோஷங்களை எழுப்பினர்.

காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி, தரைவழித் தாக்குதல்களில் இதுவரை 4,500க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 11,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல்களுக்கு இஸ்ரேல் மீது கடும் கண்டனங்கள் எழுந்துள்ளதைத் தொடர்ந்து, பிரித்தானியாவில் உள்ள பாலஸ்தீனிய ஆதரவாளர்கள் பலர் பேரணியில் ஈடுபட்டனர்.

குறிப்பாக லண்டனில் லட்சக்கணக்கான மக்கள் ஊர்வலத்தில் ஈடுபட்டு, ”காசா மீது குண்டு வீசுவதை நிறுத்து” மற்றும் ”இப்போதே போர் நிறுத்தம் வேண்டும்” என்றும் கோஷமிட்டனர்.

இந்த அணிவகுப்பில் சுமார் 3,00,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் இணைந்ததாக பொலிஸார் மதிப்பிட்டுள்ளனர். இது முதலாம் உலகப்போரின் முடிவைக் குறிக்கும் மற்றும் இராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டவர்களைக் கௌரவிக்கும் வருடாந்திர போர்நிறுத்த நாள் நினைவேந்தலின் அதே நாளில் வந்தது.

இதில் பிரித்தானிய முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கார்பின் மற்றும் இஸ்லிங்டன் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்தப் பேரணியில் பங்கேற்று போர் நிறுத்தத்தைக் கோரினர்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...