tamilni 489 scaled
உலகம்செய்திகள்

ஒரு நகரம் மொத்தம் துர்வாடையால் முகம் சுளிக்க வைத்த கப்பல்

Share

தென்னாப்பிரிக்க தலைநகரில் மக்களை மொத்தமாக முகம் சுளிக்க வைத்த கப்பலானது இறுதியில் ஈராக் நோக்கி புறப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் நாட்டில் இருந்து 19,000 பசு மாடுகளுடன் புறப்பட்ட Al Kuwait என்ற கப்பலானது ஞாயிறன்று கேப் டவுன் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. அந்த கப்பலில் பசு மாடுகளுக்கான தீவனங்களை ஏற்றும் வகையிலேயே கேப் டவுன் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது.

ஆனால் சில மணி நேரத்திலேயே அந்த கப்பலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக மக்கள் புகார் அளிக்கத் தொடங்கினர். இதனையடுத்து NSPCA அமைப்பானது தொடர்புடைய கப்பலை ஆய்வுக்கு உட்படுத்தியது.

இதில் மலம் மற்றும் சிறுநீரின் தீவிர பாதிப்பு உட்பட, வெறுக்கத்தக்க நிலைமையில் கப்பல் இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. மேலும், அந்த கப்பலில் பசு மாடுகள் ஏற்றப்பட்டு 2 வாரங்களுக்கு மேலானதாகவும், வேறு வழியின்றி, அதன் கழிவுகளின் மீதே ஓய்வெடுக்கும் நிலைக்கு அவைகள் தள்ளப்பட்டுள்ளதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது

மேலும் காயங்கள் காரணமாக 8 மாடுகள் கொல்லப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மட்டுமின்றி, சில மாடுகள் சடலமாகவும் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த கப்பல் ஈராக் நோக்கி புறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...