உலகம்செய்திகள்

பிரித்ததானிய இளவரசி புற்றுநோயினால் பாதிப்பு

tamilnaadi 151 scaled
Share

பிரித்ததானிய இளவரசி புற்றுநோயினால் பாதிப்பு

புற்றுநோயின் ஆரம்ப கட்டத்தில் தான் இருப்பதாக பிரித்தானியாவின் இளவரசி கெத்தரின் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் அதற்கான சிகிச்சைஅவர் கிரமமாக பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அவர் வெளியிட்டுள்ள ஒரு காணொளி பதிவில்,

இந்த செய்தி பெரிய அதிர்ச்சியாக அமைந்ததாகவும் ,தமது குடும்பத்தினர் நம்பமுடியாத, கடினமான இரண்டு மாதங்களை கழித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதம் தனது வயிற்றில் பெரிய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததாக அவர் கூறியுள்ளார்.

இந்த பரிசோதனையின் போதே தமக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது எனவும் அவர் தெரிவிததுள்ளார்.

இதேவேளை ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மன்னர் சார்லஸ், தனது மருமகளின் துணிச்சலைக் கண்டு மிகவும் பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இங்கிலாந்து பிரதம மந்திரி ரிஷி சுனக் தமது செய்தி பதிவு ஒன்றில், கேட் “மிகப்பெரிய துணிச்சலை” காட்டியுள்ளார் மற்றும் “முழு நாட்டின் அன்பையும் ஆதரவையும்” பெற்றுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...