இந்தியாவில் இருந்து பிரித்தானியாவின் லண்டன் நோக்கி பயணித்த எயார் இந்திய விமான விபத்தில் உயிரிழந்த கனேடிய பெண் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒன்டாரியோ, எட்டோபிகோக் பகுதியை சேர்ந்த 32 வயதான வைத்தியர் நிராலி படேல் என தெரிய வந்துள்ளது. இந்தியாவிற்கு குறுகிய பயணம் மேற்கொண்டு மீண்டும் கனடா திரும்பிய நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
2019ஆண்டில் கனடாவில் குடியுரிமை பெற்ற நிராலி மிசிகாசாவிலுள்ள பல் வைத்தியாலை ஒன்றில் பணியாற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் பிரம்டனில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விமானத்தில் 242 பேர் பயணித்த பயணிகளில் ஒருவர் மட்டும் உயிர் தப்பிய நிலையில் 241 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய அரசாங்கம் உறுதி செய்துள்ளது.