4 31 scaled
உலகம்செய்திகள்

இந்திய மாணவர்களுக்கு கனேடிய பல்கலைக்கழகங்கள் அளிக்கும் உறுதி

Share

இந்திய மாணவர்களுக்கு கனேடிய பல்கலைக்கழகங்கள் அளிக்கும் உறுதி

கனடாவில் இந்திய மாணவர்களின் பாதுகாப்புக்கு உறுதி அளிப்பதாக கூறி பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் தற்போது முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், அசுர வளர்ச்சி கண்டுள்ள வணிகத்தில் வீழ்ச்சியைக் குறைக்க தற்போது பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் முயற்சி முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கனேடிய கல்லூரிகள் மற்றொரு செமஸ்டரைத் தொடங்கத் தயாராகும் நிலையில், சில இந்திய மாணவர்கள் தங்கள் படிப்புகளைத் தாமதப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி, கனடாவில் உயர்கல்வி என்பது தற்போதைய நெருக்கடிக்கு இணையான சேதமாகலாம் எனவும் அஞ்சுவதாக கூறப்படுகிறது. கனடாவில் சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கையில் சுமார் 40 சதவீதம் பேர்கள் இந்தியர்கள் என்ற நிலை உள்ளது.

கனடா பொருளாதாரத்தில் ஆண்டுக்கு 14.6 பில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு சர்வதேச மாணவர்களின் பங்களிப்பு உள்ளது. இந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி ஒருபக்கம், சுமார் 100,000 இந்திய மாணவர்கள் ஆங்கில மொழி திறன் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

அத்துடன் அடுத்த ஆண்டு கனடாவில் படிக்க போதுமான நிதி உதவிக்கும் ஏற்பாடு செய்து வருகின்றனர். கனடாவை பொறுத்தமட்டில் தற்போது முன்னணி பல்கலைக்கழகங்கள் ஆண்டுக்கு 40,000 கனேடிய டொலருக்கு படிப்பை வழங்க முன்வந்துள்ளது.

மட்டுமின்றி பல கல்லூரிகள் தற்போதைய நெருக்கடியால் மாணவர்கள் கைவிட்டு போகாமல் இருக்க கடும் முயற்சிகளில் ஈடுபடத் துவங்கியுள்ளனர். கனடாவில் டசின் கணக்கான பல்கலைக்கழகங்கள் தற்போது மாணவர்களை தொடர்புகொள்ளத் தொடங்கியுள்ளது.

பெரும்பாலான இந்திய மாணவர்கள் தற்போது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் கோருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில், 30 மில்லியன் மக்கள் தொகையில் ஏறக்குறைய ஒவ்வொரு நான்கு குடும்பத்திலும் ஒரு உறுப்பினர் கனடாவில் படிக்கிறார் அல்லது படிக்கத் தயாராகிறார் என்றே கூறப்படுகிறது.

பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரத்தில் இருந்து மட்டும் கடந்த ஓராண்டில் 5,000 மாணவர்கள் கனடாவுக்கு கல்வி பயில சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
1755232595226130 0
இலங்கைசெய்திகள்

இலங்கை சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரூ. 910 மில்லியனுக்கும் அதிக மதிப்பு உப்பு

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 22,950 மெட்ரிக் தொன் உப்பை இலங்கை சுங்கம் தடுத்து வைத்துள்ளதாக சுங்க...

292a7af3 f588c163 e7655f0e 0298d802 80f489e3 0508342b sarath weerasekera 1 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped
செய்திகள்அரசியல்இலங்கை

13ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் வடக்கு மாகாணம் சுயாதீனமாகும்” – சரத் வீரசேகர அச்சம்

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுமானால், இலங்கை சமஷ்டி நாடாக மாறி, வடக்கு...

images 1 1
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழ் மக்கள் பேரவை – ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ‘கொள்கைக் கூட்டு’ முடிவுக்கு வருகிறது!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிரெதிராக தனித்தனியே எதிர்கொண்ட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் (சங்கு சின்னத்தில்...

25 68f34f316f8d5
செய்திகள்இலங்கை

மண்ணில் புதைக்கப்பட்ட இஷாரா செவ்வந்தியின் கைப்பேசி மீட்பு: விசாரணையில் மேலும் பலர் சிக்குவார்கள்!

‘கணேமுல்ல சஞ்ஜீவ’ என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரின் கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா...