rtjyc 1 scaled
உலகம்செய்திகள்

சர்வதேச மாணவர்களுக்கு கனடா பல்கலைக்கழகம் செய்தி

Share

சர்வதேச மாணவர்களுக்கு கனடா பல்கலைக்கழகம் செய்தி

கனடா பல்கலைக்கழகம் ஒன்றின் துணைவேந்தர் ஒருவர், இந்திய மாணவர்கள் உட்பட அனைத்து சர்வதேச மாணவர்களுக்கும் ஆறுதலளிக்கும் செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார்.

கனடா – இந்தியா தூதரக உறவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், சர்வதேச மாணவர்களுக்கு அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதை மறுப்பதற்கில்லை.

சீக்கிய பிரிவினைவாத அமைப்பொன்றின் தலைவர் ஒருவர் கனடாவில் கொல்லப்பட்ட நிலையில், அந்த சம்பவத்தின் பின்னணியில் இந்தியா இருக்கலாம் என கனடா பிரதமர் வெளிப்படையாக குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இரு நாடுகளின் தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது.

இந்த விடயமானது கனடாவில் கல்வி கற்கும் மற்றும், கல்வி கற்க ஆயத்தமாகிவரும் இந்திய மாணவர்களுக்கு பெரும் அச்சத்தையும் கவலையையும் உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், கனடாவிலுள்ள பெரிய பல்கலைகளில் ஒன்றான யார்க் பல்கலையின் தலைவரும், துணைவேந்தருமான இந்திய மாணவர்கள் உட்பட அனைத்து சர்வதேச மாணவர்களுக்கும் ஆறுதலளிக்கும் செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான தூதரக உறவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தொடர்ந்து நடந்துவரும் விடயங்களை யார்க் பல்கலைக்கழகம் உற்று கவனித்து வருவதாகவும், இரு நாட்டு அரசுகளும் இந்த தூதரக பிரச்சினைகளுக்கு தீர்வொன்றைக் கண்டுபிடிக்கும் என தாங்கள் நம்புவதாகவும் Dr Rhonda L Lenton தெரிவித்துள்ளார்.

அதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில், கனடாவும் யார்க் பல்கலைக்கழகமும் இந்திய வம்சாவளி சர்வதேச மாணவர்களுக்கு பாதுகாப்பானது மற்றும் அவர்கள் வரவை அவை விரும்புகின்றன என மீண்டும் உறுதியளிப்பதற்காக அவர்களுடன் தொடர்ந்து தொடர்பிலிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மாணவ மாணவியருடைய உடல் மற்றும் மன நலனுக்கான உதவிகள், கல்வி தொடர்பான ஆலோசனைகள், விசா மற்றும் புலம்பெயர்தல் தொடர்பில் பல்கலை வழங்கும் உதவிகளை பெற ஆவன செய்யத் தயாராக இருப்பதாகவும் Dr Rhonda L Lenton தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
1755232595226130 0
இலங்கைசெய்திகள்

இலங்கை சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரூ. 910 மில்லியனுக்கும் அதிக மதிப்பு உப்பு

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 22,950 மெட்ரிக் தொன் உப்பை இலங்கை சுங்கம் தடுத்து வைத்துள்ளதாக சுங்க...

292a7af3 f588c163 e7655f0e 0298d802 80f489e3 0508342b sarath weerasekera 1 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped
செய்திகள்அரசியல்இலங்கை

13ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் வடக்கு மாகாணம் சுயாதீனமாகும்” – சரத் வீரசேகர அச்சம்

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுமானால், இலங்கை சமஷ்டி நாடாக மாறி, வடக்கு...

images 1 1
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழ் மக்கள் பேரவை – ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ‘கொள்கைக் கூட்டு’ முடிவுக்கு வருகிறது!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிரெதிராக தனித்தனியே எதிர்கொண்ட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் (சங்கு சின்னத்தில்...

25 68f34f316f8d5
செய்திகள்இலங்கை

மண்ணில் புதைக்கப்பட்ட இஷாரா செவ்வந்தியின் கைப்பேசி மீட்பு: விசாரணையில் மேலும் பலர் சிக்குவார்கள்!

‘கணேமுல்ல சஞ்ஜீவ’ என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரின் கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா...