உலகம்செய்திகள்

கனடா பிரதமருக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்த அமெரிக்கா

Share
7 25 scaled
Share

கனடா பிரதமருக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்த அமெரிக்கா

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும், அமெரிக்க வெளியுறவுச் செயலரும் நேற்று சந்தித்து பல முக்கிய விடயங்கள் குறித்து விவாதித்தார்கள்.

முன்னதாக இந்த சந்திப்பு குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசும்போது, அமெரிக்க வெளியுறவுச் செயலரான Antony Blinken, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்திக்கும்போது, கனடாவில் கொல்லப்பட்ட கனேடியர் தொடர்பில் நிச்சயம் பிரச்சினையை எழுப்புவார் என்று கூறியிருந்தார்.

ஆனால், கனடா பிரதமருக்கு ஏமாற்றம்தான் பதிலாக கிடைத்துள்ளது. அமெரிக்க வெளியுறவுச் செயலரான Antony Blinkenம், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரான S. ஜெய்ஷங்கரும் என்ன பேசிக்கொண்டார்கள் என்பது யாருக்கும் தெரியாது.

ஆனால், இரு நாட்டு வெளியுறவு விவகாரங்கள் அமைச்சர்களும் சந்தித்தபின் அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில், கனடா இந்திய பிரச்சினை குறித்து எதுவுமே குறிப்பிடப்படவில்லை.

கனேடிய குடிமகன் ஒருவர், கனடா மண்ணில் வைத்தே கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்தியாவின் பங்கு இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சீக்கிய பிரிவினைவாத அமைப்பொன்றின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவரே கொல்லப்பட்டவர் ஆவார்.

ஆக, கனடா இந்திய மோதல் குறித்து பேசுவதில், அமெரிக்கா மட்டுமல்ல, கனடாவின் மற்ற நட்பு நாடுகளும் கவனமாகவே இருக்கின்றன.

சீனாவிடமிருந்து மேற்கத்திய நாடுகளை பாதுகாக்கும் ஒரு தடுப்புச்சுவராக இந்தியா மேற்கத்திய நாடுகளால் பார்க்கப்படுகிறது என்பது பலரும் அறிந்த விடயம். ஆக, இந்தியாவை பகைத்துக்கொள்ளக்கூடாது என்பதில் மேற்கத்திய நாடுகள் பல கவனமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...