18 22
உலகம்செய்திகள்

கனடாவில் தாய்மொழியில் பேசி இந்திய வம்சாவளி எம்பி நெகிழ்ச்சி

Share

கனடாவில் தாய்மொழியில் பேசி இந்திய வம்சாவளி எம்பி நெகிழ்ச்சி

கனடாவின்(Canada) பிரதமர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடவுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த கனடா நாடாளுமன்ற உறுப்பினர் சந்திர ஆர்யா(Chandra Arya) தனது தாய்மொழியில் பேசி ஆதரவு திரட்டியுள்ளார்.

வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு சபையில் உரையாற்றுகையிலேயே அவர் தனது தாய்மொழியான கன்னடத்தில் பேசியுள்ளார்.

கனேடிய பிரதமர் லிபரல் கட்சியைச் சேர்ந்த ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பல எதிர்ப்புகள் எழுந்த நிலையில், சொந்த கட்சிக்குள்ளேயே, அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்தநிலையில், லிபரல் கட்சி தலைவர் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார்.

பதவி விலகினாலும் அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை பதவியில் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

லிபரல் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவர், அக்கட்சி சார்பில் கனடா பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்பதால், கட்சித் தலைமை பொறுப்பை ஏற்க அங்கு கடும் போட்டி நிலவி வருகின்றது.

இந்திய வம்சாவளியும், கனேடிய நாடாளுமன்ற உறுப்பினருமானமான சந்திரா ஆர்யா உள்ளிட்டோர் கட்சி தலைவர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.

இந்த சூழலில், தான் போட்டியிடுவதை உறுதி செய்யும் வகையில், பிரதமர் பதவிக்காக அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

பின்னர், அந்நாட்டு சபையில், தன் தாய்மொழியான கன்னடத்தில் பேசிய அவர்,

“நாடு ஒரு கடுமையான புயலை எதிர்கொள்கிறது. பல கனேடியர்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர், பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். உழைக்கும் நடுத்தர வர்க்கத்தினர் போராடி வருகின்றனர். பல குடும்பங்கள் நேரடியாக வறுமையில் மூழ்கியுள்ளன.

கனடாவின் ஏற்றுமதி மற்றும் முதலீடுகளுக்கு, இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க வளர்ந்து வரும் சந்தையாக உள்ளது.

இதனால், நம் தேவைகள் நிச்சயம் பூர்த்தியாகும். பெரிய முடிவுகளை எடுக்க பயப்படாத தலைமைக்கு கனடா தகுதியானது. விவேகம் மற்றும் நடைமுறைவாதத்தை என் வழிகாட்டும் கொள்கைகளாக வைத்து, பிரதமர் பதவி வேட்பாளராக போட்டியிடுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...