6 29
உலகம்செய்திகள்

அமெரிக்காவுக்கு கனடா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

Share

அமெரிக்காவுக்கு கனடா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

தமது நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான வரி விதிக்கப்படுமானால் அமெரிக்காவிற்கு(us) வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்திவிடுவோம் என கனடா(canada) எச்சரிக்கை விடுத்துள்ளது.

கனடாவின் ஒன்ராறியோ பிரீமியரான Doug Ford மேற்படி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்(donald trump) தான்பதவியேற்றவுடன் கையெழுத்திடும் முதல் ஆவணங்களில் ஒன்று, கனடா, மெக்சிகோ(mexcio) முதலான நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவிகித வரி விதிப்பது தொடர்பானதுதான் என்று தெரிவித்திருந்த நிலையிலேயே கனடாவின் இந்த எச்சரிக்கை வெளிவந்துள்ளது.

2023ஆம் ஆண்டில், அமெரிக்காவின் 1.5 மில்லியன் வீடுகளுக்கு கனடா மின்சாரம் வழங்கியுள்ளது. அத்துடன், மிச்சிகன், மின்னசோட்டா மற்றும் நியூயோர்க்குக்கு மின்சாரம் ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடு கனடா ஆகும்.

அண்மையில் அமெரிக்க அதிகாரிகளை சந்திப்பதற்காக வோஷிங்டன் டிசிக்கு சென்றிருந்த ஒன்ராறியோ பொருளாதார மேம்பாட்டுத்துறை அமைச்சரான Vic Fedeli, அமெரிக்கா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயில் 60 சதவிகிதம் கனடாவிலிருந்துதான் வருகிறது.

ஆக, நீங்கள் இறக்குமதி செய்யும் 60 சதவிகித எண்ணெய்க்கும் 25 சதவிகித வரி விதித்தால், உங்கள் பெட்ரோல் விலை எங்கேயோ போய்விடும் என்று தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
08 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சுன்னாகத்தில் பெண்ணின் தங்கச் சங்கிலி பறிப்பு: மைலிட்டி முகாம் இராணுவச் சிப்பாய் அதிரடிக் கைது!

யாழ்ப்பாணம், சுன்னாகம் நகரப் பகுதியில் நேற்று (25) காலை பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற...

07 1
செய்திகள்உலகம்

மொஸ்கோவில் அதிர வைத்த தற்கொலைத் தாக்குதல்: காவல்துறை அதிகாரி பலி; உக்ரைன் போர் ஆண்டு நிறைவில் பதற்றம்!

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் உள்ள சவ்யோலேவ்ஸ்கி (Savyolovsky) தொடருந்து நிலையம் அருகே, நள்ளிரவு வேளையில் நடத்தப்பட்ட...

06 2
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், இரத்தினங்களை ஒரு வாரத்திற்குள் ஒப்படைக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் போது தெமட்டகொட மஹவில கார்டன்ஸ் வீட்டில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய...