உலகம்செய்திகள்

இந்தியா கனேடியர்களுக்கு விசா வழங்கத் துவங்கினாலும் இவர்களுக்கு விசா கிடையாது…

6 12 scaled
Share

இந்தியா கனேடியர்களுக்கு விசா வழங்கத் துவங்கினாலும் இவர்களுக்கு விசா கிடையாது…

இந்தியா கனேடியர்களுக்கு விசா வழங்கும் பணியை மீண்டும் துவங்கினாலும், கனேடியர்களில் சில தரப்பினருக்கு மட்டுமே விசா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடா இந்தியாவுக்கிடையிலான தூதரக உறவில் பிரச்சினை ஏற்பட்டதைத் தொடர்ந்து, கனேடியர்களுக்கு விசா வழங்குவதை இந்தியா நிறுத்திவைத்திருந்தது.

இந்நிலையில், நேற்று முதல், இந்தியா மீண்டும் கனேடியர்களுக்கு விசா வழங்கத் துவங்கியுள்ளது. கனேடிய தலைநகர் Ottawaவிலுள்ள இந்திய தூதரகம் இந்த தகவலை நேற்று முன்தினம் வெளியிட்டது.

இதனால், இரு நாடுகளுக்கிடையிலான உறவில் சிறிது முன்னேற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும், கனேடியர்களில் சில தரப்பினருக்கு மட்டுமே இப்போதைக்கு விசா வழங்கப்பட உள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

அதாவது, கனடாவிலிருந்து இந்தியா வரும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினருக்கான விசா, வர்த்தகம், மருத்துவம், மாநாடுகளில் கலந்துகொள்வதற்கான விசா, ஆகிய விசாக்கள் வழங்கும் பணி மட்டும் நேற்று முதல் துவங்கியுள்ளது.

ஆனால், கனடாவிலிருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வருவோர், மாணவர்களுக்கான விசா, பணி, மற்றும் சினிமா படப்பிடிப்புக்காக வழங்கப்படும் விசா, ஆகியவை வழங்கும் பணி இப்போதைக்கு துவங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...