6 12 scaled
உலகம்செய்திகள்

இந்தியா கனேடியர்களுக்கு விசா வழங்கத் துவங்கினாலும் இவர்களுக்கு விசா கிடையாது…

Share

இந்தியா கனேடியர்களுக்கு விசா வழங்கத் துவங்கினாலும் இவர்களுக்கு விசா கிடையாது…

இந்தியா கனேடியர்களுக்கு விசா வழங்கும் பணியை மீண்டும் துவங்கினாலும், கனேடியர்களில் சில தரப்பினருக்கு மட்டுமே விசா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடா இந்தியாவுக்கிடையிலான தூதரக உறவில் பிரச்சினை ஏற்பட்டதைத் தொடர்ந்து, கனேடியர்களுக்கு விசா வழங்குவதை இந்தியா நிறுத்திவைத்திருந்தது.

இந்நிலையில், நேற்று முதல், இந்தியா மீண்டும் கனேடியர்களுக்கு விசா வழங்கத் துவங்கியுள்ளது. கனேடிய தலைநகர் Ottawaவிலுள்ள இந்திய தூதரகம் இந்த தகவலை நேற்று முன்தினம் வெளியிட்டது.

இதனால், இரு நாடுகளுக்கிடையிலான உறவில் சிறிது முன்னேற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும், கனேடியர்களில் சில தரப்பினருக்கு மட்டுமே இப்போதைக்கு விசா வழங்கப்பட உள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

அதாவது, கனடாவிலிருந்து இந்தியா வரும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினருக்கான விசா, வர்த்தகம், மருத்துவம், மாநாடுகளில் கலந்துகொள்வதற்கான விசா, ஆகிய விசாக்கள் வழங்கும் பணி மட்டும் நேற்று முதல் துவங்கியுள்ளது.

ஆனால், கனடாவிலிருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வருவோர், மாணவர்களுக்கான விசா, பணி, மற்றும் சினிமா படப்பிடிப்புக்காக வழங்கப்படும் விசா, ஆகியவை வழங்கும் பணி இப்போதைக்கு துவங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...