rtjy 64 scaled
உலகம்செய்திகள்

கறுப்பின முதல் சபாநாயகரைத் தேர்ந்தெடுத்த கனடா

Share

கறுப்பின முதல் சபாநாயகரைத் தேர்ந்தெடுத்த கனடா

கனடாவின் முதன் முறையாக நாடாளுமன்ற சபாநாயகர் பதவிக்கு கருப்பின நாட்டவர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கனடாவின் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான கிரெக் பெர்கஸ் அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

கறுப்பினத்தவர் ஒருவர் இந்த பொறுப்பில் அமர்வது இதுவே முதல் முறை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கியூபெக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெர்கஸ், ஆறு வேட்பாளர்களுடன் போட்டியிட்டு இந்த வெற்றியைப் பெற்றுள்ளார் என கனடிய அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒத்துழைப்பும் ஸ்திரத்தன்மையும் நிச்சயமாக நியாயமானதாக இருக்கும் என்று கிரெக் பெர்கஸ் தனது பதவியேற்பின் போது உறுதியளித்துள்ளார்.

மேலும், சில பழமைவாதிகள் பெர்கஸின் வேட்புமனுவை எதிர்த்துள்ளனர். கால்கேரி நாடாளுமன்ற உறுப்பினர் மிச்செல் ரெம்பல் கார்னர் அவர் அந்த பதவிக்கு தகுதியற்றவர் என்று தனது பகிரங்க கருத்தை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இரகசிய வாக்கெடுப்பில் பெர்கஸினை எதிர்க்கும் முகமாக நேரடியாக வாக்களித்ததாகவும் கூறப்படுகிறது.

முன்னாள் சபாநாயகர் அந்தோனி ரோட்டா, நாஜி கட்டளையின் கீழ் போராடிய உக்ரைனிய-கனேடிய வீரரை பகிரங்கமாக ஆதரித்த பின்னர், அறையில் அனைத்து தரப்பினரின் நம்பிக்கையையும் இழந்தார்.

இதனால் அவர் பதவி விலகினார். இதன் காரணமாக புதிய சபாநாயகராக கிரெக் பெர்கஸ் பதவியேற்றுள்ளார்.

Share
தொடர்புடையது
world 144
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கதிர்காம தேவாலயத்தின் இரு பிரதான பூசைகள் ரத்து: நாளை இரவு சித்திரைத் திருவிழா ஊர்வலம் ஆரம்பம்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நிலவும் புண்ணிய காலத்தைக் கருத்திற்கொண்டு, வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு...

world 143
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவை போதனா வைத்தியசாலையில் பரபரப்பு: கழிவுநீர் தொட்டியில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு!

பொலன்னறுவை போதனா வைத்தியசாலையின் கழிவுநீர் சுத்திகரிப்புத் தொட்டியொன்றிலிருந்து இன்று (ஏப்ரல் 13) சிசு ஒன்றின் சடலம்...

world 142
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் 19 பிரார்த்தனை தினமாகப் பிரகடனம்: கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிவிப்பு!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், நீதிக்காகவும் எதிர்வரும் 2026 ஏப்ரல் 19 ஆம் திகதியைப்...

world 141
செய்திகள்இலங்கை

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான நேர்முகப்பரீட்சை: ஏப்ரல் 21 முதல் ஆரம்பம்!

2023/2024 கல்வியாண்டுக்கான க.பொ.த (உயர் தர) பெறுபேறுகளின் அடிப்படையில், தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு (National Colleges...