24 662527716d8ca
உலகம்செய்திகள்

குண்டுத் தாக்குதலின் எதிரொலி – இஸ்ரேலிடம் விளக்கம் கோரும் கனடா

Share

குண்டுத் தாக்குதலின் எதிரொலி – இஸ்ரேலிடம் விளக்கம் கோரும் கனடா

Canada Contacts காசாவில் (gaza) மக்களுக்கான தண்ணீர் விநியோகத்தில் ஈடுபட்டிருந்த டிரக் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து கனடா (Canada) இஸ்ரேலிடம் (Israel) தகவல் கேட்டுள்ளது.

டொராண்டோவை (Toronto ) தளமாகக் கொண்ட உதவி அமைப்பான சர்வதேச வளர்ச்சி மற்றும் நிவாரண அறக்கட்டளை (IDRF) காசாவில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு ஆறு மாதங்களுக்கும் மேலாக “சுத்தமான குடிநீரை” வழங்கி வந்துள்ளது.

இந்நிலையில், குறித்த தண்ணீர் டிரக் மீது கடந்த வெள்ளிக்கிழமை குண்டுவீசப்பட்டதாக (IDRF) அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மக்களுக்கு மனிதாபிமான நிவாரணம்
கனடாவின் (Canada) சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் அஹ்மத் ஹுசென், தனது அலுவலகம் காசாவில் தனது தண்ணீர் டிரக் குண்டுவீசித் தாக்கப்பட்டதாகக் கூறியதை அடுத்து, “மேலும் தகவலுக்காக” இஸ்ரேலை (Israel) அணுகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

“பலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான நிவாரணம் விரைவாகவும் தடையின்றியும் நிறைவேற்றப்படுவது மிகவும் முக்கியமானது” என்று ஹசன் சமூக ஊடகத்தில் ஒரு பதிவில் தெரிவித்துள்ளார்.

எனினும் தாக்குதலால் தனது குழுவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை இல்லை என ஐ.டி.ஆர்.எஃப் தெரிவித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...

25 690c956ec39eb
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கண் பரிசோதனை நிலையத்தில் தீ விபத்து: மின் ஒழுக்கு காரணமெனத் தகவல்!

திருகோணமலைத் துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, திருகோணமலை பொது வைத்தியசாலையின் அருகாமையில் உள்ள ஒரு தனியார் கண்...