25 ஆண்டுகால பிரச்சனையில் சகோதரர்கள் அடித்துக்கொலை!
இந்தியாஉலகம்செய்திகள்

25 ஆண்டுகால பிரச்சனையில் சகோதரர்கள் அடித்துக்கொலை!

Share

25 ஆண்டுகால பிரச்சனையில் சகோதரர்கள் அடித்துக்கொலை!

இந்திய மாநிலம் குஜராத்தில் சகோதரர்கள் இருவர் நிலத்தகராறில் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் சுரேந்தி நகர் மாவட்டத்தின் சமத்ஹியல் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் அலல்ஜி பர்மர் (60), மனோஜ் பர்மர் (54).

இவர்களுக்கும் அமர்பாய் கூச்சர் என்பவரின் குடும்பத்தினருக்கும் 1998ஆம் ஆண்டு முதல் நிலம் தொடர்பில் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

விளைநிலம் தங்களுக்கு சொந்தம் என இருதரப்பினரும் நீதிமன்றத்தை நாடிய நிலையில், அலல்ஜி பர்மரின் குடும்பத்தினருக்கு தான் நிலம் சொந்தம் என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பர்மர் சகோதரர்கள் உழவு பணியை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது, அமர்பாய் கூச்சர் தனது குடும்பத்தினரிடம் சேர்ந்து அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

கூர்மையான ஆயுதங்களால் தாக்குதலுக்கு உள்ளானதால் அலல்ஜி, மனோஜ் சகோதரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அத்துடன் மூன்று பெண்கள், டிராக்டர் ஓட்டுநர் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிஸார், கொலை குற்றம் தொடர்பில் ஐந்து பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சகோதரர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
Screenshot 2025 04 03 155037 e1743676594629
செய்திகள்இலங்கை

கடும் இடிமின்னல் எச்சரிக்கை: இரவு 11 மணி வரை பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல்!

இன்று (நவ 13) இரவு 11.00 மணி வரை கடும் இடிமின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால்...

1660822330330 690785 850x460
இலங்கைசெய்திகள்

நுகேகொடைப் பேரணி மக்களுக்காக அல்ல, அதிகாரத்தைக் கைப்பற்றவே: மொட்டுக் கட்சி மற்றும் UNP-ஐ நிராகரித்த வசந்த முதலிகே!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி சிறிலங்கா பொதுஜன பெரமுன (மொட்டு) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி...

passport 1200px 10 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

புல்மோட்டை வீதியோரத்தில் கைவிடப்பட்ட ஏழு வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் மீட்பு: மர்ம நபர்கள் குறித்து காவல்துறை விசாரணை!

புல்மோட்டை 13வது தூண் பகுதியில் வீதியோரத்தில் கைவிடப்பட்டிருந்த, இலங்கையர்களுக்குச் சொந்தமான ஏழு வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளை புல்மோட்டை...