4 3 scaled
உலகம்செய்திகள்

பொது நிகழ்ச்சி ஒன்றின்போது கதறியழுத பிரித்தானிய இளவரசி

Share

பொது நிகழ்ச்சி ஒன்றின்போது கதறியழுத பிரித்தானிய இளவரசி

பொது நிகழ்ச்சி ஒன்றில் தனது ஆசிரியை ஒருவரைக் கண்ட பிரித்தானிய இளவரசி பீட்ரைஸ், அழுகையை அடக்கமுடியாமல் கண்ணீர் விட்டுக் கதறியதாக தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய இளவரசியான பீட்ரைஸ், சிறுவயதில் Dyslexia என்னும் கற்றல் குறைபாடு பிரச்சினையால் அவதியுற்றாராம். Taare Zameen Par என்னும் திரைப்படத்தைப் பார்த்தவர்களுக்கு இந்த Dyslexia என்றால் என்ன என்பது நன்கு புரியும்.

இளவரசிக்கு அந்த கற்றல் குறைபாடு பிரச்சினையை மேற்கொள்ள, Hillary Leopard மற்றும் Wendy Miles என்னும் இரண்டு ஆசிரியைகள் பெரிதும் உதவினார்களாம். அவர்கள் என் வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால், இன்றைக்கு நான் இருக்கும் நிலையை என்னால் அடைந்திருக்கமுடியாது என்கிறார் பீட்ரைஸ்.

சமீபத்தில் தொண்டு நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டாராம் இளவரசி பீட்ரைஸ். அப்போது, அந்தக் கூட்டத்தில் தனது ஆசிரியையான Hillary Leopard நிற்பதை தற்செயலாக கவனித்த பீட்ரைஸ், அழுகையை அடக்க முடியாமல் கண்ணீர் விட்டுக் கதறிவிட்டாராம்.

இளவரசி அழ, அவரைப் பார்த்து அவரது ஆசிரியையான Hillary அழ, தாங்கள் ஒரு கூட்டத்தில் நிற்பதையே மறந்துவிட்டிருக்கிறார்கள் இருவரும்.

Dyslexia தொடர்பான தொண்டு நிறுவனம் ஒன்றின் தூதுவராக இருக்கும் இளவரசி பீட்ரைஸ், தான் தனது ஆசிரியையான Hillaryயை தினமும் நினைப்பதாக கூறுகிறார்.

எவ்வளவு அதிர்ஷ்டசாலி நான் என்று கூறும் பீட்ரைஸ், எனது கற்றல் குறைபாட்டை மேற்கொள்வதற்காக என்னுடன் எனது ஆசிரியை செலவிட்ட நேரத்தை இப்போதும் எண்ணிப்பார்க்கிறேன் என நெகிழ்கிறார்.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...