24 664e5d6290cb6
உலகம்செய்திகள்

பிரித்தானியா பொதுத் தேர்தல் : அரச குடும்பம் முடிவு

Share

பிரித்தானியா பொதுத் தேர்தல் : அரச குடும்பம் முடிவு

பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரித்தானிய அரச குடும்பம் தங்களின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

தேர்தல் பரப்புரைகளில் இருந்து கவனத்தை திசை திருப்புவது அல்லது திசை திருப்புவது போல் தோன்றலாம் என்ற காரணத்தாலையே அரண்மனை இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அடுத்த அரசாங்கத்தை முடிவு செய்ய பிரித்தானியா எதிர்வரும் ஜூலை 4ம் திகதி தேர்தலுக்குச் செல்வதாக பிரதமர் ரிஷி அறிவித்தார்.

முன்னதாக பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னரை சந்தித்துள்ள பிரதமர் ரிஷி சுனக் நாடாளுமன்றத்தை கலைக்க கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில், தற்போது பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், அரச குடும்பத்தின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்த முடிவால் எவரேனும் பாதிக்கப்படுவதாக உணர்ந்தால், மன்னர் மன்னிப்புக் கோருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...